மேலும் அறிய

அரை மொட்டை அடித்த விவசாயிகள்...திருச்சியில் 26வது நாட்களாக தொடரும் போராட்டம்

திருச்சி மாநகரில் தொடர்ந்து 26 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் அரை மொட்டை அடித்து நூதன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான   2016 - ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 



அரை மொட்டை அடித்த விவசாயிகள்...திருச்சியில் 26வது நாட்களாக தொடரும் போராட்டம்

மேலும், தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.  மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம். குறிப்பாக காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடையை மீறி ஆற்றில் இறங்கி போராடிய விவசாயிகள் 25 பேர்களை கைது செய்தனர்.  மேலும் அனுமதி பெற்று அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்களையும் காவல்துறை கைது செய்தனர். 


அரை மொட்டை அடித்த விவசாயிகள்...திருச்சியில் 26வது நாட்களாக தொடரும் போராட்டம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசுகையில், "காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு முறையாக திறக்கப்படும் தண்ணீரை கர்நாடகா அரசு இதுவரை திறக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது, இதனை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருப்பதை உணர்த்தும் விதமாக இன்று தலையில் அரை மொட்டை அடித்து போராட்டாத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். மேலும்  விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட தமிழ்நாடு அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Embed widget