மேலும் அறிய

மாநகராட்சி வழங்கும் இயற்கை உரத்தை பெற்று ஆரோக்கியமான தீவனப்புல் உற்பத்தி செய்யும் கும்பகோணம் விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் தீவனப்புல் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீவனப்புல் அதிக அளவு சத்துக்களுடன் மிக வேகமாக வளர்கிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் தீவனப்புல் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீவனப்புல் அதிக அளவு சத்துக்களுடன் மிக வேகமாக வளர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கால்நடைகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்களுடன் தீவனப்புல் பயன்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான தாராசுரம் காய்கறி மார்க்கெட், கும்பகோணம் பெருமாண்டி கழிவு பொருட்கள் சேகரிக்கும் மையம், கும்பகோணம் அருகே கரிக்குலம் நகர்ப்புற குப்பைகள் சேகரித்து தரம் பிரிக்கும் மையம் ஆகிய பல்வேறு இடங்களில் இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த உரத்தை கும்பகோணத்தை சேர்ந்த 50-க்கும் அதிகமான விவசாயிகள் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பசு மாட்டிற்கு அளிக்கப்படும் தீவனப்புல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலர் இந்த இயற்கை உரங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். முழுவதும் இயற்கை முறையிலான உரம் என்பதால் இதை பயன்படுத்தி தீவனப்புல் உற்பத்திக்கு பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தீவனப்புல் அதிக அளவு சத்துக்களுடன் மிக வேகமாக வளர்கிறது. இதனால் மிகவும் சத்துள்ள தீவனப்புல் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  தற்போது மாடுகளுக்கு புல் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. நெல் சாகுபடி மூலம் கிடைக்கின்ற வைக்கோல் மாட்டின் பசியை நிவர்த்தி செய்யுமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. ஆனால் கோ-4 கோ-5 போன்ற புல் வகைகளில் மாடுகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை சார்பில் எங்களுக்கு தீவனப்புல் விதைக்கரணைகள் அளிக்கப்பட்டன.

அந்த கரணைகள் மூலம் தீவனப்புல் உற்பத்தி செய்து மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்கி வருகிறோம். இதற்காக நாங்கள் யூரியா, பொட்டாஷ் போன்ற செயற்கை உரங்களை பயன்படுத்துவது கிடையாது. இதனால் மிகவும் ஆரோக்கியமான தீவனப்புல் உற்பத்தி செய்யப்படுகிறது.

கும்பகோணம் மாநகராட்சியின் சார்பில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் உரங்களைதான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் வரை இயற்கை உரம் பயன்படுத்துவதால் சுமார் 25 டன் தீவனப்புல் செழிப்பாக வளர்கிறது. இதனால் கால்நடைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தீவனப்புல் நன்கு லாபம் தரும் தொழிலாகவும் உள்ளது என்றார். 

இந்த இயற்கை உரத்தை கொண்டு நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகள் தீவனப்புல் போன்ற மாற்றுப்பயிர்களை பயிர் செய்தால் அவர்களது நிலம் மேலும் வளம் பெறம். குறிப்பாக கும்பகோணம் மாநகராட்சி உற்பத்தி செய்யும் இந்த இயற்கை உரங்களை இலவசமாக வாங்கி பயிருக்கு உரம் இட்டால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மாறி மிகவும் மோசமாக உள்ளது.  இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால் இயற்கை முறையில் தயாரான உரங்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker: 2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker: 2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Breaking News LIVE: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Whatsapp Update: வாட்ஸ்-அப் திரையில் திடீரென வந்த வட்டம் - மெட்டா AI தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன?
Kakka Muttai Ramesh: அப்பாவின் மரணம்.. ரயில் பயணத்தில் அழுகை.. “காக்கா முட்டை” ரமேஷ் சோகக்கதை!
அப்பாவின் மரணம்.. ரயில் பயணத்தில் அழுகை.. “காக்கா முட்டை” ரமேஷ் சோகக்கதை!
நாடகமாடும் தமிழக அரசு; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையா?- அன்புமணி கேள்வி
நாடகமாடும் தமிழக அரசு; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையா?- அன்புமணி கேள்வி
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர்  ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Embed widget