மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு - நிறைவேறுமா? விவசாயிகளின் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 18 அன்று 22 செ.மீ.அளவிற்கு கனமழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பருவம் தவறிய மழை பொழிவு

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்தன. இதன் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நெல்லின் ஈரப்பதம் அளவான 17 சதவீதம் என்பதை தளர்த்தி 22 சதவீதமாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு - நிறைவேறுமா? விவசாயிகளின் கோரிக்கை

மத்திய குழு ஆய்வு

இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையினை வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்ட நெல்மணிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்வெளியில் உள்ள பயிர்களையும் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு - நிறைவேறுமா? விவசாயிகளின் கோரிக்கை

மாதிரிகள் சேகரிப்பு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளையாட்டம், மேமாத்தூர், கீழ்மாத்தூர், ஆத்துக்குடி, சேமங்கலம், வள்ளுவக்குடி, கொண்டல், இளந்தோப்பு, மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு மற்றும் விநியோகம் துறை உதவி இயக்குனர் பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர் அபிஷேக் பாண்டே, மேலாளர் இந்திய உணவுகள் கழகம் கிரிஷ், முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு )செந்தில் உள்ளிட்ட மத்திய குழுவினர் ஆய்வினைத் தொடங்கி, நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு - நிறைவேறுமா? விவசாயிகளின் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கூறுகையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்வதோடு மட்டும் அல்லாமல், தரம் திரிபுகளான நெல்லின் நிறம் மற்றும் முளைத்த நெல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதத்துக்கு இடைப்பட்ட சதவிகிதத்தில் உள்ள நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென மாநில அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு - நிறைவேறுமா? விவசாயிகளின் கோரிக்கை

நன்றி கூறிய ஆட்சியர் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 18 அன்று 22 செ.மீ.அளவிற்கு கனமழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்தது. அதனால் நெல்லும் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளினால் தர முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்று இந்த மத்திய குழுவானது ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் அனைத்து தாலுக்காவிலும் ஆய்வு செய்து, நெல்லில் எந்த அளவிற்கு ஈரப்பதம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். ஆய்விற்கு எடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மேல் 22 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என அரசிற்கு பரிந்துரை செய்ய உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அரசிற்கும், விவசாயிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில்குமார் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மோகன், வேளாண் துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா ஆகியோர் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை; உழவர்களுக்குக் குறுவைத் தொகுப்புடன் ஏக்கருக்கு ரூ.5000 மானியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்!
மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை; உழவர்களுக்குக் குறுவைத் தொகுப்புடன் ஏக்கருக்கு ரூ.5000 மானியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget