மேலும் அறிய

நடப்பாண்டு குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் குறைவு: சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா?

2024 ஆம் ஆண்டில் மேட்டூர் அணை திறப்பு தாமதமானாலும், குறுவை சாகுபடியில் பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நடப்பாண்டு சூப்பர் எல் நினோ ஆண்டாக இருப்பதால், நீர் ஆதாரம் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

தஞ்சாவூர்: மேட்டூர் அணை நடப்பாண்டு இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்காக இதுவரை திறக்க இயலாத நிலை நிலவுகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரமுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை பருவ நெல் சாகுபடியைத் தொடங்கினர். ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனர்.


நடப்பாண்டு குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் குறைவு: சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா?

இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி நடப்பாண்டு காவிரி நீர் வரத்து இல்லாததால், இலக்கும் ஏறக்குறைய 4.10 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை பருவத்துக்கான நெற் பயிர் நடவு காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கராகவும், திருவாரூர் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கர் இலக்கில் 1.15 லட்சம் ஏக்கராகவும் குறுவை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 200 ஏக்கர் என்ற இலக்கை விஞ்சி 98 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 4,300 ஏக்கராக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 4.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 3.68 லட்சம் ஏக்கர் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 1.97 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீரும் குறைந்து வருவதால், ஆழ்குழாயை நம்பி நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததாவது:

முன் பட்டத்தில் குறுவை சாகுபடியைத் தொடங்கியவர்களில் சிலர் அறுவடை செய்துள்ளனர். பலர் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையிலுள்ள பயிர்களுக்கு பாதிப்பு இருக்காது. காவிரி நீர் வராத நிலையில், பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. சில இடங்களில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் உவர் நீராக மாறி வருகிறது. 

மழையும் பெய்யாத நிலையில், நடவு செய்து ஒரு மாதத்துக்கு உள்பட்ட மற்றும் மூன்றாவது உரமிடும் தருணத்தில் உள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து மழை பெய்தால்தான் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

இதனிடையே, அறுவடை செய்த விவசாயிகளும் தாளடி சாகுபடியைத் தொடங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். காவிரி நீர் வரத்து, வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து, இரு மாதங்கள் கழித்து அடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்கலாம் என இருக்கிறோம். இதேபோல, ஒரு போக சம்பா சாகுபடியையும் தொடங்குவதற்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

டெல்டா மாவட்டங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து குறுவை, சம்பா சாகுபடிகளில் அமோக விளைச்சல் கிடைத்து வந்தது. இதனிடையே, 2024 ஆம் ஆண்டில் மேட்டூர் அணை திறப்பு தாமதமானாலும், குறுவை சாகுபடியில் பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நடப்பாண்டு சூப்பர் எல் நினோ ஆண்டாக இருப்பதால், நீர் ஆதாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் முதல் பருவமான குறுவை சாகுபடியே கேள்விக்குறியாக இருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை சாகுபடிப் பரப்பளவு (ஏக்கரில் கடந்தாண்டும், இந்தாண்டும்)

தஞ்சாவூர்  - 1.99 லட்சம் - 1,51,525

திருவாரூர் - 1.93 லட்சம் - 1,15,845

மயிலாடுதுறை - 99,253 - 98,500

நாகை - 75,250  - 4,300

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் பம்ப்செட்டுகளை வைத்து சாகுபடி பணிகளை செய்துள்ளனர். சம்பா சாகுபடிக்காவது காவிரி நீர் வருமா என்ற  எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இயற்கை கை கொடுக்குமா? கொடுத்தால்தான் நெற்களஞ்சியம் பசுமையை போர்த்தும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நடப்பாண்டு குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் குறைவு: சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா?
நடப்பாண்டு குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் குறைவு: சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா?
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget