Suresh raina : நான் ஒரு 'பிராமணன்' சுரேஷ் ரெய்னா கருத்தால் சர்ச்சை..
இந்திய அளவில் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஐ.பி.எல். போட்டி மிகவும் பிரபலம். இந்த போட்டித்தொடரில் பல இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதைப்போலவே, தமிழக அளவில் டி.என்.பி.எல். என்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தொடர், கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். போட்டித் தொடர் ஜூலை 19-ந் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 5வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டி நடைபெற்றது.





















