Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
புதுடெல்லியில் அண்மையில் நிறைவடைந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போராட்டத்தின் போது வைரலான வீடியோக்கள் "வாந்தி வரவழைப்பவை" என்று பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "சாக்கடை, குப்பை மற்றும் அருவருப்பை" பரப்புவதாக கருத்துக்களை எடுத்து வைத்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நாடு முழுவதும் பரவியது. இளம் தலைமுறையினர் தொடங்கி பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் போன்றவை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியது. போராட்டத்தின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்
இந்த நிலையில் நடிகையும் எம்.பியுமான கங்கனா ராணவத் மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அருவருப்பை நான் பார்த்ததே இல்லை. இந்த Gen-z போராட்ட வீடியோக்கள் வாந்தி வரவழைப்பதாக உள்ளன. அவர்கள் பேசும் விதமும், பயன்படுத்தும் மொழியும்... ஒவ்வொரு ஃபிரேமிலும் இவ்வளவு கொச்சையான விஷயங்களை ஒரே நேரத்தில் நான் பார்த்ததே இல்லை.
"இவர்களை யார் பெற்று வளர்க்கிறார்கள்? இந்தியா என்பது கலாச்சார நேர்த்தியும் அழகும் கொண்ட மக்கள் வாழும் பூமி. ஆனால் நீங்களோ உங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக்கொண்டு, அவர்களைப் போலவே நடந்து கொள்கிறீர்கள். உலகிற்கு உங்கள் குப்பையையும் அருவருப்பையையும் மட்டுமே காட்டுகிறீர்கள். இந்த வீடியோக்களைப் பார்த்து மனதளவில் காயமடைந்துள்ளேன், இதிலிருந்து மீள எனக்கு டிஜிட்டல் detox தேவை" என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டங்கள் தற்போது கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ட்ரெண்டிங் செய்திகள்






















