மேலும் அறிய

Subramanian Swamy | சிக்கலில் ராகுல்?நெருக்கும் சு.சுவாமி..பரபரக்கும் டெல்லி அரசியல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரிய தனது மனு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளர். 5 ஆண்டுகள் ஆகிய போதிலும் சுப்பிரமணியன் சுவாமி இதை கையில் எடுத்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.

2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் பிரிட்டன் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  2009-ல் வெளியிடப்பட்டபோதும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அயல்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

அந்த மனுவில், பிரிட்டன் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தவராகும் வருமான கணக்கு தாக்கல் செய்த 2005 - 2006 ஆண்டுகள் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என தெரிவித்திருக்கிறார் என்று சுப்ரமணிய சுவாமி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது பிரிவை மீறுவதாகும் என சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக 14 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு 2019 ஏப்ரலில் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.

இதற்கிடையில், ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே உச்ச நீதிமன்றம் இதில் தலையிட கோரி இரு தனி நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏதோ ஒரு நிறுவனம் ஒருவர் பிரிட்டன் குடிமகன் என்று கூறினால் அதற்காக அவரை பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த குற்றச்சாட்டு செல்லாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இப்போது சுப்பிரமணியன் சுவாமியின் புகாராகும். நமது நாட்டின் சட்டம் ஒரு நபர் இரண்டு குடியுரிமை பெற்று இருப்பதைத் தடை செய்கிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க உள் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

ராகுல் காந்தி குடியுரிமையை ரத்து செய்வதன் தொடர்பாகவும் தான் எழுதிய கடிதம் தொடர்பாகவும் முடிவு எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் வீடியோக்கள்

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்
Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
Nalla Neram Today Sep 12: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 12: Rasi Palan: கன்னி வேலையில் பிஸி.. சிம்மம் சுறுசுறுப்பு .! உங்கள் ராசிக்கான பலன்.!
Rasi Palan: கன்னி வேலையில் பிஸி.. சிம்மம் சுறுசுறுப்பு .! உங்கள் ராசிக்கான பலன்.!
Embed widget