DMK vs TVK Fight | பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட தவெகவினர்! மண்டையை உடைத்து அட்டூழியம்
தவெக தலைவர் விஜயின் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்த திமுகவினரை தட்டிக்கேட்ட தவெக வினரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெடிலும் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஜெயமனி, சரவணன், செந்தில்முருகன்ஆகியோர் பேனர் வைத்துள்ளனர். அந்த இடத்தில் திமுகவினர் பேனர் வைக்கக் கூடாது என கூறியதாக எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.
அதனையும் மீறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். நள்ளிரவில் அவர்கள் வைத்த அந்த பேனரை திமுக வினர் கிழித்தாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக மற்றும் த.வெ.கவினரிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் திமுகவைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சேர்ந்து இவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சரவணன் மற்றும் ஜெயமனி ஆகியோரின் மண்டை உடைந்து இரத்த காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ரிஷிமந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனரை அகற்ற கோரி திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





















