பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அவர்கள் தற்போது பெறும் ஊதியத்துடன் கூடுதலாக மாதாந்திர சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பிரதமர் ரிசர்ச் சேர் ஃபெலோஷிப் (Prime Minister Research Chair Fellowship) திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், வழங்கப்படும் மானியம், முன் அனுபவம் மற்றும் பொறுப்புகள் குறித்த முழுமையான விவரங்களைக் கீழே காணலாம்.
இந்தியாவில் உயர்நிலை ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவும் பிரதமர் ரிசர்ச் சேர் ஃபெலோஷிப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
என்ன தகுதி?
இந்த ஃபெலோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM), மருத்துவம் அல்லது வேளாண்மை ஆகிய துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது தேசிய ஆராய்ச்சி மையங்களில் பேராசிரியராகவோ அல்லது அதற்கு இணையான மூத்த விஞ்ஞானி பதவியிலோ பணியாற்றி இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சித் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்களில் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை பெருமளவில் வெளியிட்டிருப்பது கட்டாயம்.
மேலும், காப்புரிமைகளை பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க, கற்பித்தல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் நீண்டகால முன் அனுபவம் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.
ஆராய்ச்சியாளர்களின் பொறுப்புகள்
இந்த ஃபெலோஷிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மூத்த ஆராய்ச்சியாளர்கள், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான அதிநவீன ஆராய்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இளநிலை ஆராய்ச்சியாளர்கள், பிஎச்.டி மற்றும் போஸ்ட்-டாக்டோரல் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகச் செயல்பட்டு, புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான ஆராய்ச்சிப் கூட்டாண்மையை மேம்படுத்துவதும் இவர்களது முதன்மைப் பொறுப்பாகும்.
உதவித்தொகை எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அவர்கள் தற்போது பெறும் ஊதியத்துடன் கூடுதலாக மாதாந்திர சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுமட்டுமின்றி, ஆராய்ச்சிக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குதல், ஆய்வகப் பணிகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி உதவியாளர்களை நியமித்தல் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள் ஆகியவற்றைச் சமாளிக்க பெரிய அளவிலான வருடாந்திர ஆராய்ச்சி மானியமும் அரசால் வழங்கப்படும்.
தகுதியான மூத்த விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகக் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆகஸ்ட் 15 கடைசித் தேதி ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.primeministerfellowshipscheme.in/
ட்ரெண்டிங் செய்திகள்






















