மேலும் அறிய

நிதிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு ஆப்பு? சிராக் பஸ்வான் அதிரடி வியூகம்! சீனுக்கு வரும் பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைக்கும் வகையில் அதிரடி வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் சிராக் பஸ்வான். பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைக்க தூது விட்டுள்ளது ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியில் புயலை கிளப்பி உள்ளது. 

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது மற்றும்  நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் மற்றும் பிரசாந்த் கிஷோர் தனித்தும் போட்டியிடுகின்றனர். இப்படி 3 அணிகள் களமிறங்குவதால் போட்டி சூடுபிடித்துள்ளது. 

இந்தநிலையில் ஆளும் தரப்பு கூட்டணியில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. மத்தியில் ஆளும் பாஜக இருவரையும் சமாதானம் செய்து தங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் தக்க வைத்துவந்தது. ஆனால் இந்த முறை இருவருக்கும் இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் மீண்டும் மோதல் வெடித்து உள்ளதால் என்டிஏ கூட்டணி உடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணில் நிதிஷ்குமார் கட்சியான  ஐக்கிய ஜனதா தளம் 107 தொகுதியிலும், பாஜக 105 தொகுதியிலும் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 31 தொகுதியை சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை இடையே பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்க்கு சிராக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தங்களுக்கு குறைந்தது 40 தொகுதிகள் வேண்டும் என்று போர்கொடி தூக்கியுள்ளார்.


தங்களது வலிமைக்கு ஏற்றவாரு தொகுதிகள் தர வில்லை என்றால் என்டிஏ-வை விட்டு விலக தயார் என்று மூத்த தலைவர்கள் கோபமாக பேசி வருகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் பிரசாந்த் கிஷோருடன் கூட கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரே போடாய் போட்டுள்ளனர். மேலும் அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை பஞ்ச் டயலாக் பேசி வருகின்றனர். இதனால் நிதிஷ்குமார் அப்செட்டாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதி கிடைக்காததாலும் மேலும் தனது தந்தை பஸ்வான் மறைவுக்கு பிறகு தங்களது லோக் ஜனசக்தி கட்சியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என எண்ணிய சிராக் பஸ்வான்  கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப்போட்டியிட்டார் . 

அந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிட்ட 110 தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 133 தொகுதியில் நிதிஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை எதிர்த்து களம் கண்டார் சிராக். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றார். தேர்தலுக்கு பிறகு தனது சொந்த சித்தப்பா பசுபதி குமார் மூலம் கட்சியை உடைக்க நிதிஷ்குமார் திட்டம் தீட்டியதாக பகீர் கிளப்பினார் சிராக். அதேபோல் அவரது சித்தப்பாவும் மற்ற 4 எம்.பி.க்களும் சிராக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் லோக் ஜனசக்தி கட்சி இரண்டாக உடைந்தது. 2021-ல் லோக் ஜனசக்தி கட்சி ராம் விலாஸ் என்ற புதிய கட்சியை உருவாகினார் சிராக் பஸ்வான் மற்றும் அவரது சித்தப்பா ராஷ்ட்ரிய லோக் சமதா என்ற புதிய கட்சியை உருவாக்கினார். இவர்கள் இருவரும் தற்போது பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது சிராக் தலைமையிலான லோக் ஜனசக்தி .இதனால் மூலம் மோடி தலைமையிலான 3.0 அரசாங்கத்தில் மத்திய கேபினட் அமைச்சரானார் சிராக் பஸ்வான். 

நிதிஷ்குமார் வயது மூப்பு காரணமாக அவரால் தீவிரமாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை, இதுவே அவருக்கு கடைசி தேர்தல் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேபோல வரும் காலத்தில் பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுப்பார் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.

இதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கருத்து கணிப்பில் தேஜஸ்வி யாதவ் முதல் இடத்திலும், பிரஷாந்த் கிஷோர் இரண்டாம் இடமும் பிடித்தனர் அதில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் நிதிஷ்குமார். இது பீகார் அரசியலில் கூர்ந்து கவணிக்கப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்  சிராக் பஸ்வான்,  பிர்ஷாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்தால் அது நிதிஷ்குமாருக்கு அரசியலில் பேரிடியாக அமையும், மேலும் வரும் காலங்கலில் பிரஷாந்த் கிஷோர் முதல்வராக வாய்ப்பு இது உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இதன்மூலம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி பீகாரில் ஆட்சி அமைக்க வழிவக்கும் என நிதிஷ்குமார் தரப்பு புலம்புகின்றனர்.

இதுபற்றி பாஜக தரப்பில் கூறுகையில் சிராக் எங்கள் கூட்டணியிலே தொடர்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அரசியல் வீடியோக்கள்

”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget