மேலும் அறிய

டாடா குழுமத்தில் அதிகார போட்டி அமித்ஷா, நிர்மலாவுடன் MEETING கோபத்தில் நோயல் டாடா! | Rift At TATA Trusts

ரத்தன் டாடா மறைந்த ஓராண்டுக்குள்ளாகவே டாடா குழுமத்தில் வெடித்துள்ள பிரச்னையால் அது இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா குழுமத்தைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

நாட்டின் மிகவும் முன்னணி மற்றும் நம்பகமான ப்ராண்டாக டாடாவின் பெயர் திகழ்கிறது. உப்பு தொடங்கி விமான சேவை வரை என, ஏராளமான துறைகளில் இந்த குழுமம் வலுவாக காலூன்றியுள்ளது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து இருப்பதோடு, நாட்டின் தொழில்துறை மற்றும்பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தான், டாடா குழுமத்தின் நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையில் ஒருமித்த கருத்துகள் எட்டப்படாமல் பிரச்னை ஏற்பட்டுள்ளதகாவும், அதன் விளைவாக டாடா சன்ஸ் அறக்கட்டளையில் உள்ள உறுப்பினர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா, டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர், நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

டாடா அறக்கட்டளையை சேர்ந்த அறங்காவலர்கள் குழுமத்தின் பிரச்னையை மத்திய அரசிடம் கொண்டு சென்றதாகவும், அதனை ஆராய்ந்து தீர்வு காண அரசு முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதால், டாடா பிரச்னைக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ரத்தன் டாடா மறைந்த ஓராண்டுக்குள்ளாகவே டாடா குழுமத்தில் இந்த பிரச்னை உருவெடுத்துள்ளது. வரும் 10ம் தேதி குழுமத்தின் போர்ட் மீட்டிங்கும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 156 ஆண்டுகளாக இயங்கி வரும் டாடா குழுமமானது, சுமார் 400-க்கும் அதிகமான நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதில் 30 பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. 

டாடா குழுமத்தின் சர்வதேச விதிகளின்படி, டாடா சன்ஸ் தொடர்பான சில விஷயங்களுக்கு டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதில் ரூ.100 கோடிக்கு மேல் முதலீடுகள் அல்லது தலைவரை நியமித்தல்/நீக்குதல் ஆகியவை அடங்கும். தனது சகோதரரின் மறைவை தொடர்ந்து அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்ற நோயல் டாடா, அங்கு தனது அதிகாரத்தை நிலைநாட்ட போராடுவதாக கூறப்படுகிறது. குடும்பப் பெயரை கொண்டு அவர் தலைவர் பதவிக்கு வந்துவிட்டாலும், அவருக்கான ஒத்துழைப்பு என்பது கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அறக்கட்டளை தற்போது இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதாம். ஒன்று தலைவர் நோயல் தலைமையிலான குழு மற்றொன்று மெஹ்லி மேஸ்திரி தலைமையிலான எதிர் கோஷ்டி. இதில் முக்கியமான முடிவுகளில் இருந்து தன்னை விலக்கியதற்கு மெஹ்லி மேஸ்திரி அத்ருப்தி தெரிவித்ததை தொடர்ந்து பிரச்னை வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்தியா வீடியோக்கள்

Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Northeast Monsoon: இனி தான் ஆட்டமே.. நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்
Northeast Monsoon: இனி தான் ஆட்டமே.. நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?
உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?
CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
”இவெரல்லாம் ஒரு பொதுச்செயலாளரா? புஸ்ஸி ஆனந்தை நீக்குங்கள்” விரிச்சுவல் வாரியர்ஸ் போர்க்கொடி!
தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! விஜய் கொடுத்த TASK! 20 நிமிட MEETING
EX IAS-ன் அரசியல் எண்ட்ரி! ராகுல் தரமான சம்பவம்! மரண பீதியில் கம்யூனிஸ்ட், பாஜக
நெருங்கும் தீபாவளி! மாணவர்களுக்கு அறிவுரைகள்! பள்ளிகளில் விழிப்புணர்வு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Northeast Monsoon: இனி தான் ஆட்டமே.. நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்
Northeast Monsoon: இனி தான் ஆட்டமே.. நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?
உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?
CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
AK 64 : ரேஸிங் சீசன் முடிந்தது...அடுத்த படத்திற்கு தயாரான அஜித் குமார்..அப்டேட் எப்போ தெரியுமா ?
AK 64 : ரேஸிங் சீசன் முடிந்தது...அடுத்த படத்திற்கு தயாரான அஜித் குமார்..அப்டேட் எப்போ தெரியுமா ?
Kushboo: ''தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களை நானும் இறங்கி அடிப்பேன்“; நடிகை குஷ்பு பளிச் பதில்
''தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களை நானும் இறங்கி அடிப்பேன்“; நடிகை குஷ்பு பளிச் பதில்
மதுபோதையில் தகராறு செய்த இயக்குநர் ? படத்தை காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்த விஷால்
மதுபோதையில் தகராறு செய்த இயக்குநர் ? படத்தை காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்த விஷால்
TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்
TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்
Embed widget