”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகே கார்த்திக்கின் உண்மையான முகம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. கார்த்திக் மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் 30க்கும் அதிகமான குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்ததும் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனால் உடனடியாக கார்த்திக்கின் பழக்கத்தை துண்டித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த இளைஞர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் தனது நண்பர்களுடன் மதுபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு பைக்கில் வந்த கார்த்திக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீட்டின் வாசலில் எறிந்தார். அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை எரிந்ததால் தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அங்கிருந்த பைக்கை ஓரமாக வைத்துவிட்டு தீயை அணைத்தனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பெண்ணின் தந்தையையும் இளைஞர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















