”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்
அமைச்சர்கள் யாராவது ஊழல் செய்தால் தெரிந்தவர், தெரியாதவர் என யாரையும் பார்க்க மாட்டேன் உடனடியாக பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அமைச்சவரை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிகை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில்அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக கடந்த 2 வாரமாக முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு துறை வாரியாக அமைச்சர்கள், அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வந்தார். இதனைடுத்து இன்று காலை முதலைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அந்த வகையில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக நிதி நிலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல் அமைச்சர் விஜய் அதிகாரிகளை அனுப்பிவிட்டு அமைச்சர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தவெக அரசு ஊழலற்ற நேர்மையான அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனது நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், லஞ்சம் இல்லாத அரசாக இந்த அரசு விளங்கும் எனவும், அதில் உறுதியாக இருங்கள். மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்
மேலும் அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால்,தெரிந்தவர், தெரியாதவர் என யாரையும் பார்க்க மாட்டேன். யார் தவறு செய்தாலும் உடனே நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் அமைச்சராக இருந்தாலும் நடவடிக்கை இருக்கும் ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்தாக ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல், வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















