மேலும் அறிய

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்தது என்ன? கொலையின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தொடர்பாக முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அலமேலு தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான செந்தில்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக செந்தில்குமார் தனது சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் தங்கியுள்ளார்.

தனக்கு ஷேவிங் செய்ய வேண்டும் என சவரத் தொழிலாளி ஒருவரை காலை தனது வீட்டிற்கு வருமாறு தெய்வசிகாமணி சொல்லியுள்ளார். அதற்காக அதிகாலையே வீட்டுக்கு வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிகு வெளியே தோட்டத்தில் தெய்வசிகாமணி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உள்ளே அவரது மனைவியும் மகனும் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தெய்வசிகாமணியை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.

நள்ளிரவில் நடந்தது என்ன என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூர்மையான கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வீட்டின் வெளியே இருப்பதை பார்த்தால், சத்தம் கேட்டு அவர் வெளியே வரும் போது தாக்குதல் நடந்திருக்கலாம், மற்ற 2 பேரும் வீட்டுக்குள்ளேயே வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்பகை ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.

தோட்டத்தில் விவசாயம் பார்த்து வந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் பிரச்னை செய்து வந்ததால், அவரை தெய்வசிகாமணி 20 நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கியுள்ளார். அதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த நபர் இந்த கொலையை செய்திருப்பதற்கான வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த கொலையில் 2 பேராவது ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செய்திகள் வீடியோக்கள்

"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget