மேலும் அறிய

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்தது என்ன? கொலையின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தொடர்பாக முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அலமேலு தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான செந்தில்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக செந்தில்குமார் தனது சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் தங்கியுள்ளார்.

தனக்கு ஷேவிங் செய்ய வேண்டும் என சவரத் தொழிலாளி ஒருவரை காலை தனது வீட்டிற்கு வருமாறு தெய்வசிகாமணி சொல்லியுள்ளார். அதற்காக அதிகாலையே வீட்டுக்கு வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிகு வெளியே தோட்டத்தில் தெய்வசிகாமணி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உள்ளே அவரது மனைவியும் மகனும் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தெய்வசிகாமணியை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.

நள்ளிரவில் நடந்தது என்ன என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூர்மையான கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வீட்டின் வெளியே இருப்பதை பார்த்தால், சத்தம் கேட்டு அவர் வெளியே வரும் போது தாக்குதல் நடந்திருக்கலாம், மற்ற 2 பேரும் வீட்டுக்குள்ளேயே வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்பகை ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.

தோட்டத்தில் விவசாயம் பார்த்து வந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் பிரச்னை செய்து வந்ததால், அவரை தெய்வசிகாமணி 20 நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கியுள்ளார். அதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த நபர் இந்த கொலையை செய்திருப்பதற்கான வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த கொலையில் 2 பேராவது ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செய்திகள் வீடியோக்கள்

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
Embed widget