ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! UTS செயலி முடிகிறது, புதிய RailOne ஆப் மூலம் பயணத்தை எளிதாக்குங்கள்!
மார்ச் 1 முதல் UTS மொபைல் செயலியில் டிக்கெட் முன்பதிவு அல்லது பருவகால பாஸ் சேவைகள் இனி கிடைக்காது. இந்த செயலி முற்றிலுமாக நிறுத்தப்படும்.
ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய சேவைகள் மற்றும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், இந்திய ரயில்வே RailOne செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், ரயில்வே இப்போது பழைய UTS மொபைல் செயலியை நிறுத்த முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக, ரயில்வே பயணிகள் இந்த செயலியைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வருகிறது.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள் மற்றும் பருவகால பாஸ்கள் இந்த UTS ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டன. இதன் பிறகு, ரயில்வே RailOne என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பயணத்தை முன்பை விட எளிதாக்க முடியும் என்று இந்திய ரயில்வே விளக்கமளிக்கிறது.
மார்ச் 1 முதல் UTS மொபைல் செயலியில் டிக்கெட் முன்பதிவு அல்லது பருவகால பாஸ் சேவைகள் இனி கிடைக்காது. இந்த செயலி முற்றிலுமாக நிறுத்தப்படும். மேலும் அதன் மூலம் புதிய டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்படுள்ளது. ரயில் பயணிகள் RailOne செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுமாறு இந்திய ரயில்வே அறிவுறுத்துகிறது. பழைய செயலி நிறுத்தப்பட்டால் ஏற்படும் எந்த பிரச்சனையும் இது தடுக்கும். நீங்கள் முன்பு UTS செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், இப்போது RailOne செயலியைப் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
இதுவரை, பயணிகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல செயலிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் IRCTC மூலமாகவும், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் UTS மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், RailOne செயலி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும். Rail One ஆப் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள், நேரடி ரயில் கண்காணிப்பு, PNR நிலை, பயண புதுப்பிப்புகள், ரயிலில் உணவு ஆர்டர் செய்தல், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பல ரயில்வே சேவைகளை ஒரே செயலியில் வழங்குகிறது.
பயணிகள் இப்போது தொடர்ந்து செயலிகளை அடிக்கடி மாற்றும் தொந்தரவிலிருந்து விடுபடுவார்கள். RailOne செயலியில் புதிய கணக்கை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே UTS அல்லது IRCTC பயனர்களாக இருப்பவர்கள் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இந்த செயலி Android மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது. இது பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களால் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலி ரயில் பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. டிஜிட்டல் கட்டணங்களைச் செய்ய பயணிகளை இந்திய ரயில்வே ஊக்குவிக்கிறது. RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிஜிட்டல் கட்டணத்தில் 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை செல்லுபடியாகும். UPI, ATM CARD, CREDIT CARD, NET BANKING அல்லது டிஜிட்டல் வாலட்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் இந்த சலுகையைப் பெறலாம்.























