மேலும் அறிய

'தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க நேரிடும்' - மத்திய அரசின் விதிகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் இன்று முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த விதிகளை வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விதிகளின்படி வாட்ஸ் அப் தளத்தில் யார் முதலில் ஒரு சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்தார் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விதியை வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்க மறுத்தது. ஏனென்றால் அதன் தனி மனித தரவு பாதுகாப்பு கொள்கைக்கு இந்த விதி மாறாக உள்ளது என்று வாட்ஸ் அப் எதிர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த புதிய விதிகள் தொடர்பாக வாட்ஸ் அப் தளம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனிமனித உரிமைக்கு எதிராக உள்ளது என்று வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு கேட்கும் போது ஒரு தகவலை யார் முதலில் பகிர்ந்தார் என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உள்ளது. இதுவும் எங்களுடைய தனிமனித தரவு பாதுகாப்பிற்கு மிகவும் எதிரானது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை யார் முதலில் பகிர்ந்தார் என்று மட்டுமே அரசு கேட்கும் போது தெரிவிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் வாட்ஸ் அப் தரவு பாதுகாப்பு கொள்கையின் படி அதை செய்வது மிகவும் கடினமான ஒன்று. எனவே விதிகளை பின்பற்ற வேண்டும் என்றால் என்கிரிப்ஷன் (குறியாக்கம்) வாட்ஸ் அப் உடைக்க வேண்டும். அதாவது தனிப்பட்டவர்களின் தகவல்களை கண்காணிக்க வேண்டும். இதற்கு அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் புட்டாசாமி வழக்கில் அளித்த தனியுரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதையும் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க நேரிடும்' - மத்திய அரசின் விதிகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு

முன்னதாக இந்த விதிகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதை அமல்படுத்த அரசு 90 நாட்கள் அவகாசம் அளித்தது. அதன்படி மே 25ஆம் தேதி வரை இதை ஏற்க சமூக வலைத்தளங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த விதிகளை இந்தியாவில் 50 லட்சம் பயனாளர்களுக்கு மேல் உள்ள சமூக வலைத்தளங்கள் நிச்சயம் ஏற்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் ஒரு இந்திய அதிகாரியை புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைக்க வேண்டும். அத்துடன் அரசு சட்டப்படி நீக்க கோரிக்கை விடுக்கும் பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் இவை நீக்க வேண்டும். அத்துடன் அரசு புகார்கள் தொடர்பாக எளிதாக சமூக வலைத்தளங்களை அணுக ஒரு குழு மற்றும் நெறிமுறைகளை இந்த நிறுவனங்கள் அமைக்க வேண்டும். இந்தப் புதிய விதிகள் அதிக கட்டுப்பாடு உடையதாக உள்ளதாக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவை அரசிற்கு அதிகளவில் அதிகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. லோகேஷ் கனகராஜ் படத்தை மிஞ்சிய கடத்தல்.. அதிகாரிகள் ஷாக்
முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு கடத்தல் சம்பவம்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
M. Dhanapal Profile: கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
Embed widget