மேலும் அறிய

Twitter Lay off : ஆபீஸுக்கு வந்துக்கிட்டு இருக்கீங்களா, அப்படியே வீட்டுக்கு போங்க.. பணியாளர்களை குறைக்கும் ட்விட்டர்?

பணிநீக்கத்தால் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு அவர்களது பணி மின்னஞ்சல் மூலம் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து ஆட்குறைப்பு நிகழுமா இல்லையா என்கிற கேள்வி இழுபறியாக நீடித்து வந்தது.இதை அடுத்து பசிபிக் நேரப்படி இன்று காலை 9 மணிக்குள் அது தொடர்பான தகவல்களை தனது ஊழியர்களுக்கு மெயில் வழியாக அந்த நிறுவனம் அனுப்பும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து பணிநீக்கத்தால் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு அவர்களது பணி மின்னஞ்சல் மூலம் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்றும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அவர்களது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Twitter Lay off : ஆபீஸுக்கு வந்துக்கிட்டு இருக்கீங்களா, அப்படியே வீட்டுக்கு போங்க.. பணியாளர்களை குறைக்கும் ட்விட்டர்?

முன்னதாக, ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி இருந்தது.

உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிலையில்தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது.  சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் ட்விட்டர் பங்குகளை நிறுவனத்தின் பணியாளர்கள் வங்குவதை தவிர்க்கவே என கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்படாதவர்களுக்கு அதிக பணி சுமை கொடுக்கப்பட்டுள்ளது.  மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவைச் சந்திக்க ட்விட்டரில் உள்ள பொறியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காம்ப் ஆஃப்கள் அல்லது கூடுதல் மணி நேரங்களுக்கு பணம் செலுத்துவது பற்றி அவர்களால் பேச முடியாது, அப்படி பேசினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், அதனை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது.  

புளூ டிக்கான சரிபார்ப்பு செயல்முறைக்காக ட்விட்டர் பொறியாளர்களுக்கு நவம்பர் 7ம் தேதிக்குள் பணம் செலுத்தி சரிபார்ப்பு வசதியை தொடங்க வேண்டும் அல்லது வேலையை இழக்க நேரிடும் என மஸ்க் கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சில ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என்று சிஎன்பிசி ஆதாரங்கள் கூறுகின்றன.

பொறியாளர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் 50 சதவீத ஆட்குறைப்பு என மிரட்டி, ஊழியர்களை உத்தரவுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் முதல் கட்ட பணிநீக்கங்களில் சுமார் 2000 தொழிலாளர்கள் நீக்கப்படலாம்.  பணிநீக்கம் செய்வதற்கு முன்பே தலைமை அதிகாரிகள் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு விடைபெற்றுள்ளனர். இதனால் ட்விட்டர் முழுமையாக மஸ்க் கட்டுக்குள் வந்தது.   ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற சிறந்த பிராண்டுகள் தங்கள் விளம்பரங்களை ட்விட்டர் தளத்திலிருந்து பின்வாங்கியுள்ளனர். ட்விட்டரில் விளம்பரதாரர்களின் நம்பிக்கைக்கு இது மேலும் ஒரு அடியாக இருக்கும்.

சிறந்த விளம்பர நிறுவனமான IPG, கோகோ கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதன் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டரில் பிரச்சினைகள் தொடர்வதற்கு முன் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. வெஸ்டெட் ஷேர் என்பது நிறுவனத்தில் பங்குகளை வழங்கும் ஊழியர்களுக்கு அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிறுவனர்களுக்கு, பெரும்பாலும் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பங்குகளைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த பங்கு விருப்பங்களை மீட்டெடுப்பதற்கான 100 சதவீத உரிமைகளை அவர்கள் பெறுகிறார்கள். மஸ்க்கின் கீழ், டெஸ்லா ஏற்கனவே பங்கு மானியங்களைப் பெறுவதற்கு முன்பு மக்களை பணிநீக்கம் செய்ததற்காக வழக்குகளை எதிர்கொண்டார், அதனால்தான் ட்விட்டர் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget