மேலும் அறிய

இதுதான் லேட்டஸ்ட் புரளியா? ”கொரோனாவுக்கும் - 5G நெட்வொர்க்குக்கும் சம்பந்தமில்லை..” - தெளிவுபடுத்தியது மத்திய அரசு

5ஜி மொபைல் கோபுரங்களை அமைத்து நடத்தப்படும் சோதனைகளாலேயே கொரோனா வேகமாகப் பரவுவதாக தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறானது.

நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா பரவலுக்கும் 5G மொபைல் கோபுர பரிசோதனைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. காட்டுத் தீயைக் கூட கட்டுப்படுத்திவிடலாம் ஆனால் சமூகவலைதள வைரல் விஷயங்களை எந்த மூடிபோட்டும் மூடமுடியாது. கொரோனா உலகை அச்சுறுத்த ஆரம்பித்த நாள் முதலே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் இன்னும் இத்யாதி இத்யாதி சமூக வலைதளங்களில் கொரோனா சார்ந்த விஷயமில்லாத நாளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அன்றாடம் ஏதேனும் விஷயம் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலானவை அச்சுறுத்தும் தொனியிலேயே அமைந்துவிடுகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது 5ஜி மொபைல் டவர்கள் அமைப்பதாலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது எனும் விஷம விஷயம். இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய தொலைதொடர்புகள் துறை  (Department of Telecommunications DoT) விளக்கமளித்திருக்கிறது.
 
அதில் கூறப்பட்டிருப்பதாவது, “சமூகவலைதளங்களில் பரவலாக ஒரு விஷயம் பகிரப்பட்டு வருகிறது. 5ஜி மொபைல் கோபுரங்களை அமைத்து நடத்தப்படும் சோதனைகளாலேயே கொரோனா வேகமாகப் பரவுவதாக தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. இதில் எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லை. 5-ஆம் தலைமுறை அலைக்கற்றைக்கும் கொரோனா பரவலுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இப்படியான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 
மேலும், 5ஜி நெட்வொர்க் பரிசோதனைப் பணிகள் இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை. ஆகையால் 5ஜி மொபைல் கோபுர பரிசோதனையால் கொரோனா பரவுவதாக வெளியாகும் தகவலே அடிப்படை ஆதாரமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மொபைல் கோபுரங்களானவை அயனியாக்கம் செய்யாத ரேடியோ அலைவரிசைகளையே வெளியேற்றுகின்றன. அவற்றின் வீரியம் மிகமிகக் குறைவு. அதனால், அவற்றால் மனித உடலின் உயிர் செல்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்த இயலாது. மத்திய தொலைதொடர்புகள் துறை அனுமதித்துள்ள பேஸ் ஸ்டேஷன் ரேடியோ அலைவரிசை வெளியேற்றுதல் அளவானது சர்வதேச ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறைகளைவிட 10 மடங்கு மிகக் கடுமையானவையாகும். 
 
இந்தியாவில் இயங்கும் செல்ஃபோன் சேவை நிறுவனங்களும் இதனை முறையாகக் கடைபிடிக்கின்றன. அதனை உறுதி செய்யவும் எங்களிடம் சீரான நடைமுறை இருக்கிறது. இருப்பினும், எந்த ஒரு குடிமகனுக்காவது மொபைல் கோபுரங்களில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ரேடியோ அலைவரிசை வெளியேறுவதாக சந்தேகம் இருக்குமேயானால், அவர்கள் https://tarangsanchar.gov.in/emfportal என்ற இணையதளம் வாயிலாக கோரிக்கை மனு அளித்து சம்பந்தப்பட்ட செல்ஃபோன் கோபுரத்தை பரிசோதனைக்கு உட்படுத்தலாம். 
 
பொதுவாகவே செல்ஃபோன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் அலைவரிசை தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆப்பிள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! மடிக்கக்கூடிய ஐபோன் முதல் வாட்ச் வரை! என்னென்ன வரப்போகிறது?
ஆப்பிள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! மடிக்கக்கூடிய ஐபோன் முதல் வாட்ச் வரை! என்னென்ன வரப்போகிறது?
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Coimbatore Pump Industry: ‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!
‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!
நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!
நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu: ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
TN By Election : 5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
Vijay Commission : ’திமுகவிற்கு முற்றும் நெருக்கடி’ புதிய விசாரணை கமிஷனை அமைக்க முதல்வர் விஜய் முடிவு…!
'இனி விஜய் கமிஷன்’ திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் முடிவு..!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
Toyota Cars: ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
Embed widget