மேலும் அறிய

கோலி, புஜாரா, ரஹானே - வாட்டி எடுக்கும் அதே மிடில் ஆர்டர் பிரச்சனை..

இங்கிலாந்து-இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சொதப்பியுள்ளனர்.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியை போல் இந்தப் போட்டியிலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் வீரர்களான புஜாரா, கோலி,ரஹானே ஆகிய மூவரும் சொதப்பியுள்ளனர். விராட் கோலி மட்டும் இந்தப் போட்டியில் இரட்டை இலக்கை ஸ்கோரை எட்டினார். அவர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்னை குறித்து தரவுகள் கூறுவது என்ன? பிரச்சனை தான் என்ன?

இந்திய கிரிக்கெட் அணி கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எனப் பல டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதன்பின்னர் தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த அனைத்து டெஸ்ட் தொடர்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய பிரச்னை பேட்டிங்தான். அதிலும் குறிப்பாக இந்தியாவின் மிடில் ஆர்டர் இடத்தில் உள்ள 4,5 மற்றும் டாப் ஆர்டர் இடத்தில் இருக்கும் 3ஆவது இடத்தில் இருக்கும் வீரர்களின் செயல்பாடுகள்தான். 


கோலி, புஜாரா, ரஹானே - வாட்டி எடுக்கும் அதே மிடில் ஆர்டர் பிரச்சனை..

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் 3,4,5 ஆவது இடம் மிகவும் முக்கியமான இடமாக அமைகிறது. இந்தியா அணியில் அந்த இடத்தில் நீண்ட நாட்களாக புஜாரா,விராட் கோலி, ரஹானே ஆகிய மூன்று பெரிய வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக அமையவில்லை. அதுவே நமது அணியின் பேட்டிங் மோசமாக அமைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது 5 பந்துவீச்சாளர்களை கொண்டு தான் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்று வருகிறது. 

ஏற்கெனவே நம்முடைய டெயில் எண்டர்கள் சரியாக விளையாட மாட்டார்கள். ஆகவே இப்படி 5 பந்துவீச்சாளர்களுடம் விளையாடும் போது நம்முடைய மிடில் ஆர்டர் மீது ரன் அடித்தே ஆகவேண்டிய நெருக்கடி உருவாகும். அந்த நெருக்கடியை சரியாக கையாளாமல் இந்த மூன்று முக்கிய வீரர்களும் சொதப்பி வருவது தான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இருப்பினும் இந்திய அணி எப்படி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுகிறது என்ற சந்தேகம் நமக்கு வரக்கூடும். அதற்கு முக்கிய காரணம் நம்முடைய  தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் தான். அவர்கள் முடிந்தவரை இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் வெளிநாடு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பும்ரா,ஷமி,இஷாந்த் கூட்டணி அனைத்து அணிகளின் பேட்டிங்கை ஒரு கை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக சிராஜ், ஷர்தல் தாகூர் ஆகியோரும் உள்ளது பந்துவீச்சில் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

சரி கோலி,புஜாரா மற்றும் ரஹானேவின் சமீபத்திய செயல்பாடுகள் என்ன?

கோலி,புஜாரா,ரஹானே 2020 முதல்  தற்போது வரை  டெஸ்ட் செயல்பாடு:

வீரர்கள்  போட்டிகள்  ரன்கள்  அரைசதம்  சதம் சராசரி
புஜாரா 13 551 5 0 25.09
விராட் கோலி 10 387 3 0 24.19
ரஹானே  13 541 1 1 25.76

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த மூவரில் ரஹானே மட்டும் ஒரே ஒரு சதத்தை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்துள்ளார். கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தற்போதுவரை சதம் அடிக்கவே இல்லை. மேலும் புஜாரா கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 9, 12*, 4, 15, 8, 17, 0, 7, 21, 15 ஒரு அரைசதம் கூட பதிவு செய்யவில்லை. அதேபோல் ரஹானே கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 1 0 67 10 7 27 49 15 5 1 ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார்.


கோலி, புஜாரா, ரஹானே - வாட்டி எடுக்கும் அதே மிடில் ஆர்டர் பிரச்சனை..

மேலும் இந்திய கேப்டன் விராட் கோலியை பொறுத்தவரை கடந்த 10 இன்னிங்ஸில் அவர் 3 அரைசதம் அடித்துள்ளார். அதுதவிர கடைசியாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்தார். அதன்பின்னர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடிக்கவே இல்லை. இவர்களின் பேட்டிங் சொதப்பல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் 146/3 என இருந்த இந்திய அணி 217 ரன்களுக்கு அப்போட்டியில் ஆட்டமிழந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட்டில் 97/0 என இருந்த இந்திய அணி 112/4 என மாறியது. 

அந்த நிலை தற்போது நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்துள்ளது. 267-3 என இருந்த இந்திய அணி 284-5ஆக மாறி மீண்டும் ஒரு மிடில் ஆர்டர் சொதப்பலை சந்தித்துள்ளது. இந்த நிலை எப்போதுதான் மாறும் என்று இந்திய ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இந்தியாவின் ரன் வேட்டைக்கு ‘ஸ்பீட் ப்ரேக்கர்’: ராகுல், ரஹானே அவுட்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Mamallapuram New Bus Stand: மாமல்லபுரம் பேருந்து நிலையம்: 40 வருட கனவு நனவாகிறதா? ஜூலைக்குள் திறப்பு! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மாமல்லபுரம் பேருந்து நிலையம்: 40 வருட கனவு நனவாகிறதா? ஜூலைக்குள் திறப்பு! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Embed widget