மேலும் அறிய
Rohit Sharma: 2வது டெஸ்ட் போட்டியிலும் ரோகித்சர்மா விலகல்..! கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் இந்தியா..
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித்சர்மா
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தனது கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டியில் டாக்காவில் வரும் 22-ந் தேதி விளையாட உள்ளது. இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தினார்.
இந்த நிலையில், ரோகித்சர்மாவிற்கு இன்னும் காயம் குணமடையாத நிலையில் அவர் டாக்காவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட உள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















