Rinku Singh: புற்றுநோயுடன் போராட்டம்.. மகனுக்காக தியாக வாழ்க்கை.. ரிங்கு சிங் தந்தை மரணம்!
இந்த வார தொடக்கத்தில் ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரிங்கு சிங் தற்போது டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இப்படியான நிலையில் அவரது தந்தை உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் உலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
28 வயதான ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடைசி கட்டத்தில் இருந்ததால் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கைவிரித்தனர். எனினும் கான்சந்த் சிங் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்த நிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே இந்த வார தொடக்கத்தில் ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரிங்கு சிங் தற்போது டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இதனால் சென்னையில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு விளையாட வந்த அவர் திடீரென தனது தந்தையைக் காண நொய்டா சென்றார். ஆனால் மீண்டும் அணியில் ரிங்கு சிங் இணைந்தாலும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக ரிங்கு சிங் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.
இப்படியான நிலையில் இன்று அதிகாலை ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் உயிரிழந்தார். இந்த தகவலை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “ரிங்கு சிங்கின் தந்தை ஸ்ரீ கான்சந்த் சிங் ஜியின் மறைவைப் பற்றி அறிந்து வேதனையடைந்தேன். டி20 உலகக் கோப்பையின் போது தனது பொறுப்புகளில் அவர் உறுதியாக இருந்தாலும், ரிங்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான நேரமாக இருக்கும். எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் உள்ளன. வாகேகுரு மறைந்த ஆன்மாவுக்கு நித்திய சாந்தியையும், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு வலிமையையும் தைரியத்தையும் வழங்கட்டும்” என கூறியுள்ளார்.
உயிரிழந்த கன்சந்த் சிங் ரிங்கு சிங்குவை ஒரு கிரிக்கெட் வீரராக வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அலிகரில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். நிதி சவால்களை குடும்பம் சந்தித்த போதிலும் ரிங்கு சிங் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான அனைத்தையும் கன்வந்த் சிங் செய்து கொடுத்தார். கடந்த ஆண்டு ரிங்கு சிங் தனது தந்தைக்கு 3.19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கவாசாகி நிஞ்ஜா பைக்கை பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்தில் இணைவார் என ரிங்கு சிங் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























