மேலும் அறிய

'போதும் முடியல' நாட்டுக்கு திரும்பிய ராஜஸ்தான் அணி வீரர் லிவிங்ஸ்டோன்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் வீரர்கள் அனைவரும் பயோ பபுள் முறையில் இருந்து வருகின்றனர். இந்த பயோ பபுள் முறை வீரர்களுக்கு பெறும் சவாலை தந்து வருகிறது. பயோ பபுள் முறையால் மன அழுத்தம் ஏற்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் நாடு திரும்பியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் மும்பையில் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் வீரர்கள் அனைவரும் பயோ பபுள் முறையில் இருந்து வருகின்றனர். இந்த பயோ பபுள் முறை வீரர்களுக்கு பெறும் சவாலை தந்து வருகிறது. 

 

இந்நிலையில் பயோ பபுள் முறையால் மன அழுத்தம் ஏற்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் நாடு திரும்பியுள்ளார். இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது இந்தியா வந்தார். அப்போது முதல் இந்தியாவில் பயோ பபுள் முறையில் உள்ளார். 

 

மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களுக்கு மாற்று வீரராக அணியில் இடம் பெற்று இருந்தார். இதனால் அப்போதும் பயோ பபுள் முறையில் இருந்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இவர் பங்கேற்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். 



போதும் முடியல' நாட்டுக்கு திரும்பிய ராஜஸ்தான் அணி வீரர் லிவிங்ஸ்டோன்

ஆகவே கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பயோ பபுள் முறையில் இருப்பதால் இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும் ஏற்று அவரை வழி அனுப்பியுள்ளது. இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் இவர் களமிறங்கவில்லை. 

 

இவரின் விலகல் ராஜஸ்தான் அணிக்கு ஒரு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஏற்கெனவே முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதுகு அறுவை சிகிச்சைக்கு பிறகு இன்னும் அணியில் சேரவில்லை. இந்தச் சூழலில் தற்போது லிவிங்ஸ்டோனும் விலகியுள்ளது பெரும் பின்னடைவை தந்துள்ளது.  நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை மூன்று போட்டிகளில் பங்கேற்று 1 வெற்றி மற்றும் 2 தோல்வியை பெற்றுள்ளது. நாளை மும்பையில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 



போதும் முடியல' நாட்டுக்கு திரும்பிய ராஜஸ்தான் அணி வீரர் லிவிங்ஸ்டோன்

ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சன்ரைசர்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார். அவரும் பயோ பபுள் முறையை சுட்டிக்காட்டி விலகுவதாக தெரிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பயோ பபுள் முறை வீரர்களுக்கு பெரிய சுமையாக அமைந்துள்ளது. ஆகவே வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் தொடர்களுக்கு நடுவில் நல்ல இடைவேளை இருந்தால் நல்லது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனை ஐசிசி மற்றும் பிற நாடுகளின் கிரிக்கெட் வாரியம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
Embed widget