மேலும் அறிய

Pakistan vs New Zealand: பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது, நியூசிலாந்து - கொதித்தெழுந்த அக்தர்

மிக மோசமான கொரோனா சூழ்நிலைகளில் நியூசிலாந்தில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

தங்கள் நாட்டிற்கு எதிரான கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து கடைசி நேரத்தில் ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோபமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் பாதுகாப்புடன் நடத்தியது. போட்டி நடத்துவது தொடர்பாக, பிரதமர் இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து தலைமையிடம் பேசினார். அதுமட்டுமில்லாமல் உறுதியும் அளித்தார். ஆனால், அதனை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். இன்றைய அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று. அது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், நியூசிலாந்து  பின்வரும் புள்ளிகளை நினைவில் கொள்ள வேண்டும் என பதிவிட்ட அக்தர், கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் 9 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, நியூசிலாந்துடன் பாகிஸ்தான் வலுவாக நின்றது. மிக மோசமான கொரோனா சூழ்நிலைகளில் நியூசிலாந்தில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்க நியூசிலாந்து அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடத்தியதை பொருட்படுத்தாமல் விளையாடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. இந்நிலையில், இன்று தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

2003-ம் ஆண்டை அடுத்து, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அளித்துள்ளது. “பாதுகாப்பு காரணங்களுக்காக” என சுட்டிக்காட்டி தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

போட்டி தொடங்குவதற்கு முன்பு, மைதானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையொட்டி, வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ரூம்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட்டைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், குண்டு வைத்திருப்பது தொடர்பான தகவல் போலியான செய்தி என உறுதி செய்யப்பட்டது. 

பாக்., மைதானத்தில் வெடிகுண்டு: டாஸ் போடுவதை ரத்து செய்து நாடு திரும்பும் நியூசி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget