மேலும் அறிய

Pakistan Cricket Board Loss: கப்புதான் ஜெயிக்கல.. கல்லாவும் கட்டலையா.? நெருக்கடியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு, நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி எவ்வளவு நஷ்டம் தெரியுமா.?

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 860 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நெருக்கடியில் சிக்கியுள்ள வாரியம், வீரர்களின் ஊதியத்தில் கை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரும் நஷ்டத்தை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், அபாரமாக ஆடி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், இந்த முறை போட்டிகளை நடத்திய பாகிஸ்தான், அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல், போட்டியிலிருந்து வெளியேறியது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்காக, 40 மில்லியன் டாலர்களை பாகிஸ்தான் செலவிட்டுள்ளது. அதோடு, கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை புதுப்பிக்க 18 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொடரை நடத்தியதில், டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் அவர்களுக்கு கிடைத்த வருமானமோ, வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டும்தான் என கூறப்படுகிறது.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு, இந்த சாம்பியன்ஸ் கோப்பை மூலம், சுமார் 85 மில்லியன் டாலர்கள் அளவிற்கு, அதாவது இந்திய மதிப்பின்படி, 860 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீரர்களின் ஊதியத்தில் கை வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

சாம்பியன்ஸ் டிராபி மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் அடிமடியில் கை வைத்துள்ளதாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ஆம், சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை 90% வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல், இருப்பில் உள்ள வீரர்களின் சம்பளத்தையும் சுமார் 88% வரை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதேபோல், போட்டிக்காக வெளியே செல்லும் வீரர்களை, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்காமல், அதற்கும் குறைந்த அளவிலான ஹோட்டல்களில் தங்க வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் நஷ்டத்திற்கு இந்தியாவும் காரணமா.?

சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, போட்டிகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை அந்நாடு சந்தித்தது. ஏனெனில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதோடு, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றதால், தொடரை நடத்தும் பாகிஸ்தானில் இறுதிப் போட்டி நடைபெறாமல், துபாயில் நடைபெற்றதும், வருமானம் குறைந்ததற்கு ஒரு காரணமாக அமைந்தது.

போட்டிகளை நடத்தும் பாகிஸ்தான் அணி, ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல், லீக் சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறியதும், இந்திய அணி அங்கு விளையாடாததும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனாலேயே, பெருத்த நஷ்டத்தை சந்தித்து, தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
கோவாவில் கலக்கிய வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள்... 265 ரன்கள் குவித்து அசத்திய தமிழ்நாடு...
கோவாவில் கலக்கிய வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள்... 265 ரன்கள் குவித்து அசத்திய தமிழ்நாடு...
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
தோனி, ரோகித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்.. ஆர்சிபி-யின் அசுர வளர்ச்சி! பாராட்டிய முன்னாள் வீரர்
தோனி, ரோகித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்.. ஆர்சிபி-யின் அசுர வளர்ச்சி! பாராட்டிய முன்னாள் வீரர்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget