மேலும் அறிய

MS Dhoni in Hosur: கோட் சூட்டில் காட்டிய கெத்து.. சென்னையை தொடர்ந்து ஓசூரில் மாஸ் காட்டிய தோனி.!

ஓசூரில் உள்ள எம்.எஸ். தோனி குலோபல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொண்டு பங்கேற்றார்.

ஓசூரில் உள்ள எம்.எஸ். தோனி குலோபல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொண்டு பங்கேற்றார். அங்குள்ள பள்ளி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியை திறந்து வைத்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இணைந்து, பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நிகழ்வும் தொடங்கப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

 

மேலும், இந்த நிகழ்ச்சியில் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் பங்கேற்றார்.

இந்த நிகழ்வின்போது சுமார் 1,800 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தோனி தொடங்கி வைத்தார். ஆயிரம் ஆசிரியர்களை கொண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காக கொண்டுள்ள மைக்ரோ சாப்ட்டுடன் பெங்களுரூவில் உள்ள எம்.எஸ் தோனி குளோபல் பயிற்சி நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஓசூரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேபட்ன் எம் எஸ் தோனி குளோபல் பள்ளியில் முதல் கிரிக்கெட் மைதானம், டிஜிட்டல் விழிப்புணர்வு திட்டத்தினை எம் எஸ் தோனி தொடங்கி வைத்தார்.

முழுவிவரம்: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சென்னத்தூர் கிராமத்தில் MS.தோனி குளோபல் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கென 4 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவிற்கான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்த
 முதல் கிரிக்கெட் மைதானத்தை இன்று திறந்து வைத்தார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமியுடன் பள்ளி தனது அதிகாரப்பூர்வ இணைக்கப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நேரத்திற்கு பிறகு கிரிக்கெட்டினை தொழில் முறை பயிற்சியாக அளிக்கும் நோக்கத்துடன், பள்ளி சூப்பர் கிங்ஸ் அகாடமியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
மேலும் இந்த வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தையும், டிஜிட்டல் முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவும், அறிவுள்ளவர்களாக மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும், டிஜிட்டல் மைக்ரோசாப்ட் இன் உலகளவியல் பயிற்சி கூட்டாளியாக Tech - Avant - Garde  உடன் இணைந்து செயல்படவுள்ளது.

இந்த டிஜிட்டல் கல்வி விதிமுறை குறித்து ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும் அவர்கள் அரசு தனியார் பள்ளிகள் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் பயிற்சிக்கு பிறகு ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மைக்ரோசாப்ட் சான்றிதழ்கள்  வழங்கப்படும். இந்த நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி அதிகாரி விஸ்வநாதன் பங்கேற்று இருந்தார். மேலும் தோனி பங்கேற்பதை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் தோனி மைதானத்திற்கு வருகை தந்தார். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget