தோனி ரசிகர்களே! CSK எடுத்துள்ள 4 முக்கிய முடிவுகள் - என்னென்ன தெரியுமா?
ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 4 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி ஓய்வு பெறும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 4 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அது என்னென்ன முடிவுகள் என்பதை கீழே காணலாம்.
1. தோனி ஆடுவாரா? மாட்டாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. 44 வயதான தோனி இந்த சீசன் ஆடுவாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அணியில் ஏராளமான மாற்றங்கள் செய்துள்ள நிலையில், அவரை இந்த ஐபிஎல் தொடரில் ஆட வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸில் தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே பல ஆயிரங்கள் வரை கொடுத்து டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி மைதானத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது கடைசி ஐபிஎல் என்றும் கூறப்பட்டு வருகிறது.
2. மகளிர் பிரிமீயர் லீக்கில் சிஎஸ்கே:
ஆண்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படுவது போல, பெண்களுக்கு டபுள்யூஎல் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் ஆடும் மும்பை, ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றனர். ஆனால், சிஎஸ்கே அணி சார்பில் மகளிரணி ஆடவில்லை. இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3. சிஎஸ்கே-விற்கு வேறு ஒரு மைதானம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக சேப்பாக்கம் உள்ளது. நடப்பாண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை மட்டுமின்றி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சி மைதானத்தையும் சொந்த மைதானமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
4. கீப்பராகும் சஞ்சு சாம்சன்:
சென்னை அணிக்காக வரும் சீசன் முதல் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்க உள்ளார். அடிப்படையில் அவரும் விக்கெட் கீப்பர் என்பதால், தோனிக்கு பதிலாக வரும் சீசனில் சில போட்டிகளில் சஞ்சு சாம்சனையும் விக்கெட் கீப்பிங் செய்ய வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தோனி தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியாக சிஎஸ்கே திகழ்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனி மட்டும் ஆடி வருகிறார். அணியில் ஏராளமான இளம் வீரர்களும் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய எழுச்சியுடன் வர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது.




















