மேலும் அறிய

MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!

MS Dhoni Retirement: எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

MS Dhoni Retirement: ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியாவது பிளே ஆஃப் சென்றுவிடும் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் நம்பி இருந்தனர். ஆனால், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. 

இதனால் பிளே ஆஃப் கனவுடன் இருந்த எம்.எஸ் தோனி உள்பட சென்னை அணி வீரர்களும், ரசிகர்களும் மனமுடைந்தனர். எம்.எஸ்.தோனி, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் போனதால், அழுததாக சில புகைப்படங்கள் வைரலாகின. 

மேலும், போட்டியின் முடிவுக்கு பிறகு எம்.எஸ்.தோனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு, சில கிரிக்கெட் விமர்சகர்கள் தோனிக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாகவே டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றார் என்று தெரிவித்தனர். இந்தநிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்.எஸ். தோனியில் இறுதி ஐபிஎல் போட்டியாக இருக்கக்கூடும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #Thanksmsdhoni என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். 

எம்.எஸ்.தோனியின் ஓய்வு:

இந்த சூழலில் தற்போது எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “ எம்.எஸ்.தோனி அவரது ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. எப்படியும் அப்படிப்பட்ட விஷயங்களை தோனி எங்களிடம் கூறமாட்டார். அவர்தான் முடிவு செய்வார். 

இந்த சீசனில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது, தோனியால் மற்றொரு சீசன் விளையாட முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் ஓய்வோ, விளையாடும் முடிவோ அவரை பொறுத்தது” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கான இரண்டு உலகக் கோப்பையை வென்றவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்தவருமான எம்.எஸ். தோனி, திடீர் ஓய்வு முடிவுகளால் ரசிகர்களை அதிர்ச்சியில் பலமுறை ஆழ்த்தியுள்ளார். 

டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த டிசம்பர் 30, 2024ல் ஓய்வை அறிவித்த தோனி, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பல குழு உறுப்பினர்கள் தொடர்ந்து வலி இருந்தாலும் தோனி, தனது ரசிகர்களுக்காக விளையாடி வருகிறார். அவரது காயம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காவே தோனியை கடைசியில் களமிறக்கினோம் என்று ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டார். 

ஐபிஎல் 2024 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக, மகேந்திர சிங் தோனி முக்கியமான நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்ய உள்ளே வந்த எம்.எஸ்.தோனி  220.54 என்ற ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 53.66 என்ற சராசரியுடன் 161 ரன்கள் எடுத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget