மேலும் அறிய

Yuvaraj Singh: ஆறு பந்தும் ஆகாசம் நோக்கி..15 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை சிங்கம் கெத்துகாட்டிய நாள்..யுவராஜ் செய்த சம்பவம்!

2007 செப்டம்பர் 19 இந்திய கிரிக்கெட் வீரர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை ஓடவிட்டு, ஒட்டுமொத்த உலகமும் தன்னை உற்றுநோக்க செய்தவர். ஆம், உங்கள் யூகம் சரிதான் யுவராஜ் சிங்!

இந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத தினம். அப்படி என்ன ஸ்பெஷல் டே என்று நீங்கள் கேட்டா அதற்கான பதில் இதோ.. 

2007 செப்டம்பர் 19 இந்திய கிரிக்கெட் வீரர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை ஓடவிட்டு, ஒட்டுமொத்த உலகமும் தன்னை உற்றுநோக்க செய்தவர். ஆம், உங்கள் யூகம் சரிதான் யுவராஜ் சிங்! அந்த ஒற்றை சிங்கம் 6 சிக்ஸர்களை கெத்தாக பறக்கவிட்ட நாள்தான் இன்று. 

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாகவும், ஆல்ரவுண்டராகவும் வலம் வந்தவர் யுவராஜ்சிங். இந்திய அணியின் மேட்ச்  வின்னராக பல போட்டிகளில் வலம் வந்தவர். 2007 உலககோப்பை தோல்விக்கு பிறகு டிராவிட் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, யுவராஜ்சிங்தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தோனி கேப்டனாக்கப்பட்டார். இருப்பினும், தோனியுடன் சேர்ந்த பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய இரண்டு உலக  கோப்பைகளிலும் யுவராஜ்சிங்தான் முக்கிய பங்காற்றினார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்து கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக வலம்வந்தார். அதேபோல, 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததை யாராலும் மறக்கவே முடியாது. 

15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 19) நினைவுக்கூர்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #YuvarajSingh என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மட்டும் யுவராஜ் சிங் அசைக்க முடியாத 3 சாதனைகளை படைத்தார். 

அதிவேக அரைசதம்:

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய யுவராஜ் சிங் இன்றைய நாளில் 12 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். T20I போட்டியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆண்கள் டி20 போட்டிகளிலும் அடித்த அதிவேக 50 ரன் இதுவாகும்.

ஒரே ஓவரில் அதிக ரன்கள்:

யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். அந்த ஓவரில் 36 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற சாதனை இதுவாகும்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்தியர்:

ரவி சாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே ஒரு ஓவரில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால் சாஸ்திரியின் சாதனை உள்நாட்டு முதல்தர போட்டியில் நடந்தது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை யுவராஜ் சிங்கிடம் உள்ளது, மேலும், டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த உலகின் ஒரே வீரர் யுவராஜ் மட்டுமே.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget