மேலும் அறிய

SL Cricket Board: இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்னை என்ன? கூண்டோடு கலைக்கப்பட்டது ஏன்? மீண்டு வருமா?

SL Cricket Board: உலகக் கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.

SL Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டதன் பின்னணி என்ன?, அடுத்து என்ன மாற்றம் அதில் நிகழ உள்ளது என்பன தொடர்பான பல கேள்விகள் எழுந்துள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட்:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி, இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்ற நிலையில், அதில் 5 அணிகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவையாகும். கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெற்றபோது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதேபோன்று நடப்பு உலகக் கோப்பையிலும் ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. 

சொதப்பிய இலங்கை:

ஆனால், நடப்பு உலகக் கோப்பையில் இந்தியாவை தவிர மற்ற ஆசிய அணிகள் அனைத்தும் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தின. குறிப்பாக முன்னாள் உலக சாம்பியனான இலங்கை அணி ஆரம்பம் முதல் மோசமாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தற்போது வரை 7 லீக் போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை தொடரிலிருந்து பெரும்பாலும் வெளியேறிவிட்ட நிலையில், 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு:

அண்மைகால தொடர்கள், ஆசிய கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையிலும் இலங்கை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற சர்வதேச தொடர்களுக்கு ஒரு அணியாக தயாராவது, செயல்படுவது மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக இலங்கை மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. இடைக்கால தலைவராக அந்த அணியின் முன்னாள் கேப்டனான  அர்ஜுன் ரணதுங்கா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

கடந்த 2008ம் ஆண்டு இலங்கை அணி மோசமாக செயல்பட்ட காலத்திலும், அந்த கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு அர்ஜுன் ரணதுங்கா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு இலங்கை அணியின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிபோட்டி வரையிலும் முன்னேறியது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியம் மீண்டும் கலைக்கப்பட்டு, அர்ஜுன் ரணதுங்கா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு, கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்படுவதை உறுதி செய்வதோடு, அணியில் உள்ள பிரச்னைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கும் என கூறப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபவமின்றி தவிக்கும் இலங்கை:

இலங்கை அணியில் கண்கூடாகவே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதில் முதலாவது அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாருமே அணியில் இல்லாதது தான். ஜெயவர்தனே, சங்ககாரா, மலிங்கா மற்றும் முத்தையா முரளிதரன் என பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை இலங்கை அணி கிரிக்கெட்டிற்கு வழங்கியுள்ளது. ஆனால், தற்போது அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களின் பெயர்கள் கூட ரசிகர்களின் மனதில் பதியவில்லை. நடப்பு உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இலங்கை அணியில், 11 பேர் முதன் முறையாக உலகக் கோப்பையில் களமிறங்குபவர்கள் ஆவர். சண்டிமல் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், இக்காட்டான நேரத்தில் வழிகாட்டுவதற்கான அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் இன்றி இலங்கை அணி தள்ளாடி வருகிறது.

மற்ற பிரச்னைகள் என்ன?

நட்சத்திர வீரர்களின் காயமும் இலங்கை அணியின் பெரும் பிரச்னையாக உள்ளது. ஹசரங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகியோர் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகியதும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழ் வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது போன்ற, அரசியல் காரணங்களும் இலங்கை அணியை வலுவாக கட்டமைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இந்தியாவால் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை கொண்டு, வெவ்வேறு தொடர்களில் விளையாட முடிகிறது. ஆனால், பிளேயிங் லெவனில் உள்ள ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும், அவருக்கு நிகரான ஒரு மாற்று வீரரை கூட களமிறக்க முடியாத சூழலில் தான் இலங்கை அணி தத்தளித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் அர்ஜுன் ரணதுங்கா தலைமையிலான குழு, தீர்வுகளை கண்டறிந்து இலங்கை அணி மீண்டும் வலுவாக கட்டமைக்கப்படும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rishabh Pant: ரிஷப் பண்ட் அதிரடி முடிவு: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்! காரணம் என்ன?
Rishabh Pant: ரிஷப் பண்ட் அதிரடி முடிவு: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்! காரணம் என்ன?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
Vaibhav Sooryavanshi: சூரசம்ஹார சூர்யவன்ஷி! உடைச்ச ரெக்கார்ட் எத்தனை? படைச்ச ரெக்கார்ட் என்னென்ன?
Vaibhav Sooryavanshi: சூரசம்ஹார சூர்யவன்ஷி! உடைச்ச ரெக்கார்ட் எத்தனை? படைச்ச ரெக்கார்ட் என்னென்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
TN Weather Update: பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
Embed widget