சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட்
ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சாம்பியன் ட்ராஃபி கிரிக்கெட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணியில், “விராட் கோலி, ஜெய்ஸ்வால், ஸ்ட்ரேயாஸ் ஐயர், கேல்.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாசிங்கடன் சுந்தர், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப், ஷமி, அர்ஷிப்தீப் சிங்” உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
India's squad for ICC Champions Trophy 2025!🏆🇮🇳 pic.twitter.com/Bk8vUigULX
— CricketGully (@thecricketgully) January 18, 2025
அதன்படி இந்திய அணியில், “விராட் கோலி, ஜெய்ஸ்வால், ஸ்ட்ரேயாஸ் ஐயர், கேல்.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாசிங்கடன் சுந்தர், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப், ஷமி” உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதற்கான அணி வீரர்கள் யார் யார் என பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அணியை அறிவித்தனர்.
மேலும் இந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கான அணியில் பும்ரா பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் தற்போது காயத்தில் இருந்து வந்து கொண்டிருப்பதால் அவரின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து அஜித் அகர்கர் கூறுகையில் மருத்துவ அறிக்கைக்காக் காத்திருப்பதாகவும் அது வந்ததும் அவர் அணியில் இடம்பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் விளையாட இருக்கிறது. அதேபோல் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் இல்லை. மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடுகின்றன.
அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். மேலும், விராட் கோல், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மட்டும் இடம்பெற்றுள்ளார். இது ஒரே ஒரே மாற்றம் தான். மற்றபடி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்ற அதே இந்திய அணி இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் விளையாடும்.
சஞ்சு, சிராஜ், வருண் சக்ரவர்த்திக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்கவில்லை.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

