Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு அரையிறுதியில் விளையாட தடையா? அரையிறுதிக்கு முன்பே இந்திய அணிக்கு அதிர்ச்சி..
சாம்சனின் விஷயத்தில், ஹெல்மெடை வீசுவது நிலை 1 குற்றமாகும், ஏனெனில் அது பொருத்தமற்றது, கவனக்குறைவு அல்லது ஆபத்தானது என்று மதிப்பிடப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சஞ்சு சாம்சன் செய்த வெற்றிக் கொண்டாட்டதால் அவருக்கு அரையிறுதியில் விளையாட தடை செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்:
கொல்கத்தாவில் நடந்த வெர்ச்சுவல் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 50 பந்துகளில் 97* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டதன் மூலம் சஞ்சு சாம்சன் ஹீரோவாக மாறினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கிற காட்டயத்தில் களமிறங்கியது. 196 ரன்கள் என்கிற கடினமான இலககை சாம்சனின் அபார ஆட்டத்தால் இந்திய அணி இப்போட்டியில் எளிதில் வெற்றி பெற்றது.
தடை விதிக்கப்படுமா?
இந்த நிலையில் தான் அவரது ஹெல்மெட் கழட்டி செலிபிரேஷன்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதை வீரர்களின் நடத்தை தொடர்பான ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதுகிறதா என்பதைப் பார்ப்பது இப்போது சுவாரஸ்யமாக இருக்கும். வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவுப் பணியாளர்களுக்கான ஐ.சி.சி நடத்தை விதிகள், கிரிக்கெட்டின் உணர்வுக்கு எதிரான வீரர்களின் மைதான நடத்தை மற்றும் செயல்களை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. இதில் கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகளை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பல்வேறு வகையான தவறான நடத்தைகள் தொடர்பான விதிகள் அடங்கும்.
சாம்சனின் விஷயத்தில், ஹெல்மெடை வீசுவது நிலை 1 குற்றமாகும், ஏனெனில் அது பொருத்தமற்றது, கவனக்குறைவு அல்லது ஆபத்தானது என்று மதிப்பிடப்படுகிறது.
என்ன தண்டனைகளை தர வாய்ப்புள்ளது?
இது நிலை 1 மீறலாகும், மேலும் போட்டி நடுவர் அதிகாரப்பூர்வ கண்டனத்தை விதிக்கலாம். இதன் பொருள் வீரரின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை அபராதம் அல்லது ஒன்று அல்லது இரண்டு குறைபாடு புள்ளிகள் (demerit point) விதிக்கப்படலாம். வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டத்திற்காக ஹெல்மெட்டை வீசுவது தண்டனையைத் தூண்டாது என்றாலும், போட்டி நடுவரின் விருப்பப்படி அதை விதிமீறலாக வகைப்படுத்தலாம்.
அவரது ஃபார்மைக் கருத்தில் கொண்டு, எந்த அபராதமும் இல்லாமல் அவர் விடுவிக்கப்படுவார் என்று இந்தியா நம்புகிறது. இது குறித்து உச்ச கிரிக்கெட் அமைப்பிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. சாம்சன் ஏற்கனவே அணியுடன் மும்பையை அடைந்துவிட்டார்.





















