மேலும் அறிய

இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை! மனைவி, குழந்தைகள் கண்முன்னே பரிதாபம்!

Dhammika Niroshana: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா. இவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இலங்கையின் அம்பலங்கோடாவில் உள்ள முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கன்டமவாதாவிற்கு சொந்தமான வீட்டில் தமிகா நிரோஷனா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.

இலங்கை முன்னாள் கேப்டன்:

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு கிரிக்கெட் வீரர் நிரோஷனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர கொலையை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே நடந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த நாட்டு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சிறிய ரக கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கோர சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிகா நிரோஷனா இலங்கையின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்துள்ளார்.

பிரபல வீரர்களை வழிநடத்தியவர்:

பதின்ம வயது கிரிக்கெட்டில் அதாவது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் இவர் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பர்வேஸ் மகரூப், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால் உள்ளிட்ட பலருக்கும் கேப்டனாக விளையாடியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் 20 வயதிலே கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்டார்.  மொத்தமாகவே 12 முதல்தர கிரிக்கெட் மற்றும் 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இவர் 2001 மற்றும் 2004 காலகட்டத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.

சிறந்த ஆல்ரவுண்டரான இவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2000ம் ஆண்டில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் அறிமுகமான தமிகா நிரோஷனா 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் கண்முன்னே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget