WIPL Auction: மகளிர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்தப்போகும் சிங்கப்பெண்..! யார் இந்த மலிகா அத்வானி..?
இந்தியாவில் முதன்முறையாக மகளிர் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
![WIPL Auction: மகளிர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்தப்போகும் சிங்கப்பெண்..! யார் இந்த மலிகா அத்வானி..? Malika Advani has been appointed as the auctioneer for the Women Premier League auction which will take place tomorrow who is that WIPL Auction: மகளிர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்தப்போகும் சிங்கப்பெண்..! யார் இந்த மலிகா அத்வானி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/7bbdf0fb5f0a4cd2562282a69870a02b1676181709337109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மலிகா அத்வானியை முதல் பெண்கள் பிரிமியர் லீக் ஏலத்திற்கான தொகுப்பாளராக நியமித்துள்ளது.
யார் இந்த மலிகா?
மும்பையைச் சேர்ந்த கலை சேகரிப்பாளர் ஆலோசகராக மலிகா இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவீன மற்றும் சமகால இந்திய கலைக்காகவும், ஆர்ட் இந்தியா கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும் உள்ள அவர்தான், தொடக்க சீசனின் ஏலத்தின் நாளில் சுத்தியலுடன் நின்று ஏலம் விடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐபிஎல் ஏலத்தை ரிச்சர்ட் மேட்லி, சாரு ஷர்மா மற்றும் ஹக் எட்மீட்ஸ் போன்றவர்கள் நடத்தினார்கள், என்றாலும், இந்த மகளிர் ஐபிஎல் ஏலத்தில் மலிகா இடம்பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. "ஒரு அணி குறைந்தபட்சம் 15 பேரையும், மற்றும் அதிகபட்சம் 18 பேரையும் ஏலம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அணி செலவு ரூ. 9 கோடி என்றும் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6 என்றும் WIPL அணி விதிகளை உரிமையாளர்கள் நினைவுபடுத்துகின்றனர் BCCI என்று அறிக்கை கூறியது.
வீராங்கனைகள் எப்படி பிரிக்கப்பட்டுள்ளனர்?
மொத்தம் 409 வீராங்கனைகள் வெவ்வேறு அடிப்படை விலைகளுடன் இடம்பெறுகிறார்கள். ரூ.50 லட்சம், ரூ. 40 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 20 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சம் ஆகிய ஐந்து பிரிவுகளில் வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். 246 இந்திய மற்றும் 163 வெளிநாட்டு வீரர்கள் (அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட) அவர்களின் சிறப்பு மற்றும் வயதின் அடிப்படையில், மார்க்யூ வீரர்கள், பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் என பல்வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஸ்ட்ராட்டஜிக் டைம் அவுட்
ஏலம் நடைபெறும் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிறகு 10 நிமிட ஸ்ட்ராட்டஜிக் டைம் அவுட் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. "ஒவ்வொரு செட்டின் முடிவைத் தொடர்ந்து, யுக்திகளை மறுமதிப்பீடு செய்ய உரிமையாளர்களுக்கு நேரத்தை அனுமதிக்க ஒரு சிறிய இடைவெளி (ஏலதாரரின் விருப்பப்படி) இருக்கலாம். ஒவ்வொரு இடைவேளையின் நீளமும் தொடர்புடைய தொகுப்பின் முடிவில் தொகுப்பாளரால் அறிவிக்கப்படும்.
50 லட்ச அடிப்படை விலை வீரர்கள்
ஒவ்வொரு இடைவேளைக்குப் பிறகும் ஏலம் மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன் எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒவ்வொரு இடைவேளைக்குப் பிறகும் ஏலம் உடனடியாக மீண்டும் தொடங்கும். வீரர்கள் ஏல நடவடிக்கையின் ஒவ்வொரு மணி நேரத்திலும் இந்த குறுகிய இடைவெளிகள் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, எலிஸ் பெர்ரி, சோஃபி எக்லெஸ்டோன், சோஃபி டிவைன் மற்றும் டீன்ட்ரா டாட்டின் போன்ற வீரர்கள் அதிக அடிப்படை விலைக்கு (INR 50 லட்சம்) பதிவு செய்த சில வீரர்கள். 40 லட்ச ரூபாய் அடிப்படை விலையில் 30 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஏலம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள ஜாஸ்மின் ஹால், 1ல், நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். பிசிசிஐ இன்று (பிப்ரவரி 12) இரவு 8 மணிக்கு அனைத்து உரிமையாளர்களுக்கும் ஏலத்திற்கு முந்தைய விளக்கத்தை வழங்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)