மேலும் அறிய

Rohit Sharma Cricket: 16 வருஷம் ஆகிடுச்சு.. ”இந்த 5 மேட்ச்ச மறக்கவே முடியாது” மனம் திறந்த கேப்டன் ரோகித் சர்மா..!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தனது வாழ்நாளின் மிக முக்கியமான 5 போட்டிகள் தொடர்பாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தனது வாழ்நாளின் மிக முக்கியமான 5 போட்டிகள் தொடர்பாக பேசியுள்ளார்.

ரோகித் சர்மா..!

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா, உலக கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். பல ஆண்டுகளாக தொடரும் அவரது ஆட்டத்தால் கிரிக்கெட் வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறு தருணங்களை உருவாக்கியுள்ளார். 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள நிலையில், அண்மையில் அமெரிக்காவில் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார்.  அங்கு அவர் அளித்த ஒரு நேர்காணலில் தனது கிரிக்கெட்  வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மறக்க முடியாத ஐந்து தருணங்கள் குறித்து பேசியுள்ளார்.

அந்த 5 தருணங்கள்:

அதன்படி, 2007ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற அறிமுக டி-20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வென்றது,  தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியது, 2021ம் ஆண்டு கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது,  2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காமன்வெல்த் தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்களை சேர்த்தது, தனது வாழ்நாளில் மறக்க முடியாத மிகவும் முக்கியமான கிரிக்கெட் தருணங்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு திரும்பும் ரோகித்..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 36 வயதான அவர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள, நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனவும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனவும் இந்திய அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதில் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கபப்ட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடிந்ததும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையிலான இளம் வீரர்கள்  அடங்கிய இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி அதிகப்படியான டி-20 போட்டிகளில் விளையாடுவதும், கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு அதிகம் ஓய்வளிப்பதும் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget