மேலும் அறிய

BCCI: மழைதான் பெய்யலயே..! அப்புறம் ஏன் ஓவரை குறைச்சீங்க? பி.சி.சி.ஐ. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

BCCI: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டி குறித்து ரசிகர்கள் பி.சி.சி.ஐ.யை விமர்சித்து வருகின்றனர்.

BCCI: இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில்  நடைபெற்றது. மைதானத்தில் உள்ள ஈரப்பதத்தினைக் காரணம் காட்டி போட்டியின் ஓவர்கள் 20லிருந்து 8 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து ரசிகர்கள் பலர், "மழையே பெய்யவில்லை..? பிறகு ஏன் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ.யால் மைதானத்தில் தேங்கியுள்ள நீரினை வெளியேற்ற முன் ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும், நேற்றைய போட்டியின் போது மழை பெய்யவே இல்லை. நேற்று முன்தினம் பெய்த மழையால் மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அதனை வெளியேற்றவே போட்டியின் ஓவர் குறைக்கப்பட்டதாகவும் சமூக வளைதளங்களில் ரசிகர்கள் சராமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் எனச் சொல்லும் பி.சி.சி.ஐ.யால் மழைநீர் வடிகால் ஏற்பாட்டினைச் செய்துகொள்ள முடியாதா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

நேற்று நடந்த இந்த போட்டியில் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் 43 ரன்கள் விளாசினார். இதன்காரணமாக 8 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரில் அதிரடி காட்டினார். அவர் முதல் ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசினார். அடுத்து இரண்டாவது ஓவரிலும் சிக்சர் அடித்து வந்தார். மறுமுனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதைத் தொடர்ந்து வந்த விராட் கோலி இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அவர் 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த போது ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார். இதன்காரணமாக இந்திய அணி 5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற்ற 18 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்போது களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா 6வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார். கடைசி 12 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசினார். எனினும் அவர் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து அதே ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி வரை கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசியிருந்தார்.

இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பறும் என்பதால் அந்தப் போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Embed widget