மேலும் அறிய

Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிநாட்டு மண்ணில் பேட்டிங்கில் பெரியளவு அசத்தவில்லை என்பதை தரவுகள் வெளிக்காட்டியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் நடந்த இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளது. 

சொதப்பிய ஸ்ரேயாஸ்:

தொடக்கத்திலே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, அடிக்கடி மழை குறுக்கிட்டது, 16 ஓவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தை 26 ஓவர்களாக குறைத்தது என பல காரணங்கள் இருந்தாலும் இந்தியாவின் முக்கிய வீரர்கள் சொதப்பலாக ஆடியதே பிரதான காரணம் ஆகும். 

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டும் ஆகிய நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்களில் அவுட்டானார். அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் சூழலில் அவரது பேட்டிங் அனைவருக்கும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

சேனா நாடுகளில் சோடையா?

குறிப்பாக, சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் நடக்கும் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி 346 ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி 154 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் மட்டுமே அவர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திள்ளார். 

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 869 ரன்களை எடுத்துள்ளார். 22 அரைசதங்கள் 5 சதங்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 128 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 12 போட்டிகள் ஆடியுள்ளார். அதில் 319 ரன்கள் எடுத்துள்ளார்.  அதிகபட்சமாக 105 ரன்கள் எடுத்துள்ளார். 

ஹேசல்வுட்டின் இரை:

ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பெரும்பாலும் இந்திய மண்ணிலே சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. வெளிநாட்டு மண்ணில் அவர் பெரியளவு சிறப்பாக ஆடவில்லை. இந்த நிலை நீடித்தால் அவரது இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகிவிடும். 

இதுமட்டுமின்றி ஸ்ரேயாஸ் ஐயர் ஹேசல்வுட் பந்தில் மிக எளிதில் அவுட்டாகிவிடுகிறார். டி20 போட்டிகளில் மட்டும் ஹேசல்வுட் பந்தில் 4 முறையும், ஒருநாள் போட்டிகளில் 2 முறையும் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகியுள்ளார். வெள்ளை நிற பந்துகளில் ஹேசல்வுட்டிடம் எளிதில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார்.


Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?

ரோகித் சர்மா, விராட் கோலி தங்களின் கிரிக்கெட் கேரியரின் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அவர்கள் வெளிநாட்டு மண்ணில் தங்களை ஏராளமாக நிரூபித்துள்ளனர். அடுத்த தலைமுறைக்கான வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் வெளிநாட்டு மண்ணிலும் தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஒரே ஒரு வெளிநாட்டு சதம்:

சேனா நாடுகள் மட்டுமின்றி வங்கதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி 82 ரன்களும், இலங்கையில் 5 போட்டிகளில் ஆடி 52 ரன்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 போட்டிகளில் 243 ரன்களும், வெஸ்ட் இண்டீஸில் 6 போட்டிகளில் 297 ரன்களும் எடுத்துள்ளார். 

ஸ்ரேயாஸ் ஐயர் விளாசிய 5 சதங்களில் 4 சதங்கள் இந்திய மண்ணில் விளாசப்பட்டவை. அவர் இதுவரை ஆடிய 70 ஒருநாள் போட்டிகளில் 34 ஒருநாள் போட்டிகள் இந்திய மண்ணில் ஆடியவை. எஞ்சிய போட்டிகள் வெளிநாட்டு மண்ணில் ஆடியவை. அதில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Embed widget