மேலும் அறிய

அவரும் பிஸியாகிவிட்டார், நானும் பிஸியாகிவிட்டேன்… : தோனியுடன் பிரச்சனை என்ற வதந்தி குறித்து பேசிய ஹர்பஜன்!

"ஒருவர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திவிட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்காதபோது அல்லது வீழ்ச்சிக்கான காரணம் அவரிடம் சொல்லப்படாதபோது, பல கேள்விகள் மனதில் எழுகின்றன", என்றார்.

/.,,2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் இரு வீரர்களான எம்எஸ் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சில காலமாக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன, இது குறித்து மூத்த இந்திய பந்துவீச்சாளர் இப்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

தோனி - ஹர்பஜன் கருத்துவேறுபாடா?

மஹிந்திர சிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் சில காலமாக ஊடகங்களில் பரவி வருகின்றன. இருவரும் நீண்ட காலமாக இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர், அவர்களின் புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையில் பல மறக்கமுடியாத வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இணைந்து விளையாடி உள்ளனர். கேப்டன் தோனி பலமுறை இவருடைய தூஷ்ரா பந்தை கச்சிதமாக பயன்படுத்தி உள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பிரச்சனை என்று வதந்தி பரவி வந்த நிலையில், இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் தற்போது வதந்தியை அகற்றியுள்ளார்.

அவரும் பிஸியாகிவிட்டார், நானும் பிஸியாகிவிட்டேன்… : தோனியுடன் பிரச்சனை என்ற வதந்தி குறித்து பேசிய ஹர்பஜன்!

என் வெளியேற்றத்திற்கு பதில் இல்லை

இரண்டு மூத்த கிரிக்கெட் வீரர்களும் இந்த விஷயத்தைப் பற்றி முன்பு ஊடகங்களில் பேசாத நிலையில், 2021 டிசம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது ஹர்பஜன் அதை லேசாக வெளிப்படுத்தினார். அவரது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவில், “ஒருவர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திவிட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்காதபோது அல்லது வீழ்ச்சிக்கான காரணம் அவரிடம் சொல்லப்படாதபோது, பல கேள்விகள் மனதில் எழுகின்றன. நான் அணியில் இருந்து வெளியேறியது குறித்து பலரிடம் கேட்டேன், ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று ஹர்பஜன் டைனிக் ஜாக்ரானிடம் கூறினார். ஆனால் அதற்கு காரணம் தோனியா என்ற கேள்விக்கு அவர் மறுத்து வந்தார்.

தொடர்புடைய செய்திகள்: Ind vs Aus 2nd ODI: ஒருநாள் தொடரையும் வெல்லுமா ரோகித் படை..? வெற்றியை தொடங்குமா ஆஸ்திரேலியா..? இன்று 2வது மோதல்..!

நாங்கள் நல்ல நண்பர்கள்

"எம்எஸ் தோனி மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. உண்மையில், அவர் இத்தனை ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தார். நான் பிசிசிஐ மீது புகார் செய்தேன். பிசிசிஐயை நான் சர்கார் என்று அழைக்கிறேன்! அக்கால தேர்வாளர்கள் அதற்கு நியாயம் செய்யவில்லை. அவர்கள் அணியை ஒற்றுமையாக இருக்க அனுமதிக்கவில்லை" என்று அவர் நியூஸ் 18 க்கு அளித்த பேட்டியில் கூறினார். வெள்ளிக்கிழமை, தோஹாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின்போது ஸ்போர்ட்ஸ்யாரி உடனான உரையாடலில், ஹர்பஜன் இறுதியாக தானும் தோனியும் "நல்ல நண்பர்கள்" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அவரும் பிஸியாகிவிட்டார், நானும் பிஸியாகிவிட்டேன்… : தோனியுடன் பிரச்சனை என்ற வதந்தி குறித்து பேசிய ஹர்பஜன்!

என் சொத்துக்களை அவர் எடுக்கவில்லை

"எம்.எஸ். தோனியுடன் எனக்கு ஏன் பிரச்சனை? நாங்கள் இந்தியாவுக்காக நிறைய கிரிக்கெட் விளையாடினோம், மிக மிக நல்ல நண்பர்களாக இருந்தோம், இன்னும் இருக்கிறோம். அவர் வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார், நான் என்னுடைய வாழ்க்கையில் பிஸியாகிவிட்டேன், அப்போதும் நான் அடிக்கடி சந்திப்பேன். எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை," என்றார். "எனக்குத் தெரிந்தவரை, அவர் எனது சொத்துக்கள் எதையும் எடுக்கவில்லை (என்று கூறிவிட்டு சிரிக்கிறார்). ஆனால் அவருடைய சில சொத்துக்களில், குறிப்பாக அவரது பண்ணை வீட்டின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது," என்று அவர் விளையாட்டாக கூறினார்.

தலைப்பு செய்திகள்

IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget