மேலும் அறிய

BCCI : முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மாதாந்திர பென்ஷன் அதிகரிப்பு: பிசிசிஐ அறிவிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தை பிசிசிஐ உயர்த்தியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் போட்டி அலுவலர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்தாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து கிரிக்கெட்டர்களுக்கும் அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

தற்போதுள்ள திட்டத்தின் படி, 2003-04 சீசன் இறுதி வரை 25 முதல் 49 உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனைத்து முதல் தர கிரக்கெட் வீரர்களுக்கும் மாதத்திற்கு 15,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இனிமேல், அவர்களுக்கு 30,000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படும்.

முன்னதாக, 2003-04 சீசன் இறுதி வரை 50 முதல் 74 போட்டிகள் விளையாடிய வீரர்களுக்கு 22,500 ரூபாயும் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியவர்களுக்கு 30,000 ரூபாயம்வழங்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட திட்டத்தின் படி, அவர்கள் ஒரு மாதத்திற்கு 45,000 ரூபாயும் 52,500 ரூபாயும் முறையே பெறுவார்கள்.

டிசம்பர் 31, 1993ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்று 25 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனைத்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கும் ரூபாய் 50,000 வழங்கப்பட்டது. ஆனால், புதிய கொள்கையின்படி, இந்தத் தொகை ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, 10 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் 22,500 ரூபாயும் 5 முதல் 9 டெஸ்ட் விளையாடியவர்களுக்கு மாதம் 15,000 ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்டண முறையும் திருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில், "நமது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பொருளாதார நலனில் அக்கறை செலுத்துவது மிகவும் முக்கியம். வீரர்கள் உயிர்நாடியாக இருக்கிறார்கள். ஒரு வாரியமாக, அவர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது நமது கடமையாகும். நடுவர்கள் போற்றப்படாத ஹீரோக்கள். பிசிசிஐ அவர்களின் பங்களிப்பை உண்மையிலேயே மதிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "நமது முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நலனே நமக்கு முக்கியம். அவர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டிருப்பது அந்த திசையில் வைக்கப்பட்ட முதற்படி. பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை பிசிசிஐ மதிக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கான அவர்களின் விடாமுயற்சியான சேவைகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க இது ஒரு வழியாகும்" என்றார்.

 

 

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget