மேலும் அறிய

அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?

நகராட்சி நிர்வாகத்துறை மீது அமலாக்கத்துறை அடுத்தடுத்து முன்வைத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளும், அதை நிரூபிப்பதற்காக வெளியிட்டிருக்கும் ஆதாரங்களும் திகைக்க வைக்கின்றன. - அன்புமணி.

அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய ரூ.366 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் அந்த ஊழலை மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

’’தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரூ.366 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. ஒரே துறையில் மட்டும் ரூ.2274 கோடி ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக அந்த ஊழலை மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றுள்ள இந்த புதிய ஊழல் தொடர்பான ஆதாரங்களுடன் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குனருக்கும் அமலாக்கத்துறை கடந்த 14ஆம் தேதி கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்காகவும், அவர்கள் விரும்பும் வளமான பதவிகளில் அமர்த்துவதற்காகவும், பணியமர்த்தப்படும் இடம் மற்றும்  பதவியைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் முதல் கோடிகள் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருப்பதற்கு பல வகையான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் 340 அதிகாரிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பணியிட மாற்றம் வழங்கியதற்காக மட்டும் ரூ.365.87 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, இது மிகக் குறுகிய காலத்தில் வசூலிக்கப்பட்ட கையூட்டுத் தொகை தன் என்றும், இந்த ஊழலின் முழுமையான மதிப்பு இன்னும் பல மடங்கு இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. கையூட்டாக வசூலிக்கப்பட்ட தொகை சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல தொழில்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள அமலாக்கத்துறை, இந்த ஆதாரங்களில் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

திகைக்க வைக்கும் குற்றச்சாட்டுகள்

நகராட்சி நிர்வாகத்துறை மீது அமலாக்கத்துறை அடுத்தடுத்து முன்வைத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளும், அதை நிரூபிப்பதற்காக வெளியிட்டிருக்கும் ஆதாரங்களும் திகைக்க வைக்கின்றன. ஏற்கனவே, நகராட்சி நிர்வாகத் துறையில் 2538 பொறியாளர்களை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வீதம் மொத்தம் ரூ.888 கோடி கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்யும்படி கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் காவல்துறை தலைமை இயக்குனருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியதில் ரூ.1,020 கோடி அளவுக்கு கையூட்டு மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை திசம்பர் மாதம் முதல் வாரத்தில் அனுப்பிய அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டது. இந்த இரு ஊழல்களுக்கும் ஆதாரமாக முறையே 232 மற்றும் 252 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை அனுப்பியிருந்தது.

ஊழலின் மறுஉருவம்

ஏற்கனவே நடந்த ஊழல்கள் தொடர்பாக இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் தமிழகக் காவல்துறை காலம் தாழ்த்தி வரும் நிலையில், மூன்றாவது ஊழலையும் அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறையிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் இதே துறையில் நடைபெற்ற மேலும் பல ஊழல்கள் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ஆட்சியியிலிருந்த 5 ஆண்டுகளும் திமுக அமைச்சர்கள் ஊழல் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து வந்தார்களோ? என்ற ஐயம் தான் எழுகிறது. திமுக ஊழலின் மறுஉருவம் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை; அமலாக்கத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றால் மடியில் கனமில்லை... அதனால் வழியில் பயமில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்வராத திமுக அரசு, அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய ஊழல்கள் அனைத்தையும் மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் தான் தீவிரம் காட்டி வருகிறது.

நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற முதல் ஊழலை கடந்த அக்டோபர் மாதத்திலும், இரண்டாவது ஊழலை திசம்பர் மாதத்திலும் அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியது. அவற்றின் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் எப்போதோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத திமுக அரசு, இம்மாதத் தொடக்கத்தில் தான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்த ஆணையிட்டது. ஆனால், அதையும் முன்னேற விடாமல் முடக்கு வைத்திருக்கிறது திமுக அரசு.

ஊழல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ள வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பி.என்.எஸ். சட்டத்தின் 167(2) பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. நீதியரசர் அல்தாமஸ் கபீர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பிலும் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 60 நாள்களில் ஊழல் வழக்குகளை விசாரித்து, ஆதாரங்களைத் திரட்டி குற்றப்பத்திரிகையே  தாக்கல் செய்ய வேண்டும் எனும் போது, முதல் கட்ட விசாரணை தொடங்கி 20 நாள்களாகும் நிலையில், அதை முடித்து இன்னும் ஊழல் வழக்கை பதிவு செய்ய திமுக அரசு மறுப்பது ஊழலை மூடி மறைக்கும் முயற்சியாகும்.

தமிழ்நாட்டையே திகைக்க வைத்த நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்களை இனியும் மூடி மறைக்க திமுக அரசு முயலக்கூடாது. அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய 3 ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?
Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
Embed widget