மேலும் அறிய

HK vs PAK, Match Highlight: 38 ரன்னில் முடிந்த ஹாங்காங் அணியின் ஆசிய கோப்பை கனவு... விரட்டியடித்த பாகிஸ்தான்..!

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று, வருகிற ஞாயிற்று கிழமை இந்திய அணியை எதிர்கொள்கிறது. 

ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இந்தியா ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணிகளில் ஒரு அணி தகுதி பெற முடியும். இந்தச் சூழலில் இன்று கடைசி குரூப் போட்டி நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். 

அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஹாங்காங் பந்துவீச்சாளர் இஹ்சான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும் ஃபாக்கர் ஜமானும் ஜோடி சேர்ந்து 2 விக்கெட்டிற்கு 117 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஃபாக்கர் ஜமான் 41 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த குஷ்தில் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் அதிரடியாக 5 சிக்சர்கள் விளாசி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தார். 15 பந்துகளில் அவர் 35 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 78* ரன்கள் எடுத்திருந்தார். 

193 ரன்கள் எடுத்தால் கடின இலக்குடன் ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் நிஜாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா களமிறங்கினர். கேப்டன் நிஜாகத் கான் 8 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அவரை தொடர்ந்து பின் வரிசை வீரர்களின் விக்கெட்கள் மளமளவென சரிய தொடங்கியது. 30 ரன்களுக்குள்ளே 5 விக்கெட் சரிய, தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சால் ஹாங்காங் அணியின் பேட்டிங் வரிசை படுக்க தொடங்கியது. 

பாகிஸ்தான் அணியின் தொடர் சிறப்பான பந்துவீச்சால் ஹாங்காங் அணி 10. 4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 38 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. ஹாங்காங் அணியில் அதிகபட்சமாகவே கேப்டன் நிஜாகத் கான் 8 ரன்கள் எடுத்திருந்தார்.  பாகிஸ்தான் அணி சார்பில் சதாப் கான் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று, வருகிற ஞாயிற்று கிழமை இந்திய அணியை எதிர்கொள்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget