![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Chess Olympiad 2022: பறந்து பறந்து பியானோ வாசித்த இசைக் கலைஞர்: களைகட்டிய செஸ் ஒலிம்பியாட் விழா
Chess Olympiad 2022: 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பியானோ கலைஞர் ஒருவர் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை அந்தரத்தில் பறந்துகொண்டே வாசித்து பிரம்மிப்பூட்டியுள்ளார்.
![Chess Olympiad 2022: பறந்து பறந்து பியானோ வாசித்த இசைக் கலைஞர்: களைகட்டிய செஸ் ஒலிம்பியாட் விழா Chess Olympiad 2022 Closing Ceremony Chennai Flying Pianist Playing Bharathiyar Songs 44th - Watch Video Chess Olympiad 2022: பறந்து பறந்து பியானோ வாசித்த இசைக் கலைஞர்: களைகட்டிய செஸ் ஒலிம்பியாட் விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/09/eea323fbedcf5b35e9ebcda354f593891660054322096224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Chess Olympiad 2022: 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பியானோ கலைஞர் ஒருவர் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை அந்தரத்தில் பறந்துகொண்டே வாசித்து பிரம்மிப்பூட்டியுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தற்போது நேரு ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் நடந்து வருகிறது. இதில் தமிழக முதல்வர் நேரு ஸ்டேடியத்திற்கு வரும்போது இசைக்கப்பட்ட “ஆளப் போறான் தமிழன்” பாடல் அனைவரையும் ஆரவாரத்தில் ஆழ்த்தியது. நிறைவு விழாவில் தமிழர்களின் இசை, நடனத்துடன், வெளிநாட்டு இசைகளும் இசைக்கப்பட்டு வருகின்றன. இதில், மகாகவி பாரதியாரின் பாடலான சின்னஞ்சிறு கிளியே பாடலை பியானோ இசைக் கலைஞர் ஒருவர் அந்தரத்தில் பறந்து கொண்டே இசைத்து பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
#JUSTIN | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: பறக்கும் பியானோவில் இசைத்து அசத்திய கலைஞர்https://t.co/wupaoCzH82 | #ChessOlympiad #ChessOlympiad2022 #ChessOlympiad #MKStalin pic.twitter.com/s3KmUqjkwO
— ABP Nadu (@abpnadu) August 9, 2022
செஸ் ஒலிம்பியாடில் இரட்டை வெண்கலம் இந்திய அணி வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.
செஸ் ஒலிம்பியாடில் ஆடவர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டின் ஆடவர் பிரிவில், விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் ட்ராவும் செய்து 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கப்பதக்கம் வென்றது.
11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும் 1 தோல்வி மற்றும் 1 ட்ரா செய்து 19 புள்ளிகளைப் பெற்ற அர்மீனியா அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
11 போட்டிகளில் விளையாடிய இந்தியா பி அணி 8 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ட்ரா என்ற கணக்கில் 18 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தியா ஏ அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி 1 தோல்வி மற்றும் 3 ட்ரா ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள ப்ரக்ஞானந்தா, குகேஷ், ரௌனக், அதிபன் மற்றும் நிஹல் ஆகியோர் விளையாடினர். 8 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற குகேஷ், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தார். இதனையடுத்து 9/11 என்ற கணக்கில் அவர் இந்திய அணிக்கு பதக்கத்தை உறுதி செய்தார். ஆனால் இந்திய அணி தங்கம் வெல்ல முடியாமல் போனதற்கு, நான் தான் காரணம் எனவும், குகேஷ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)