மேலும் அறிய

Asian Champions Trophy 2023: நாக்-அவுட் மேட்ச்; வரலாறு என்ன சொல்லுதுனா..! இந்தியாவ ஜப்பான் வீழ்த்துறது கஷ்டமாம்.. விபரம் உங்களுக்காக..!

Asian Champions Trophy 2023: அரையிறுதியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதவுள்ளன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 

போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 

நாளை அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியில் டிரா செய்துள்ளது. அது ஜப்பான் அணிக்கு எதிராகத்தான். அந்த அணியுடன் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் களமிறங்குவதால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

2011ஆம் ஆண்டு முதல் இதுவரை (இந்த ஆண்டை சேர்த்து) 7 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மொத்தம் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த மோதலில், இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஜப்பான் இரண்டில் வெற்றி பெற்றது. எஞ்சிய இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 

அதேபோல் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் இதுவரை அனைத்து வகை போட்டிகளிலும் மொத்தம் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்திய அணியின் கரமே உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் நாளை இரு அணிகள் மோதுவதால் இந்திய அணியின் கரமே உயர்ந்து காணப்படும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. 

போட்டி டிரா ஆனால்? 

இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் போட்டி என்பதால் இந்த போட்டி அதற்கு ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் கொடுக்கப்படும். அந்த கூடுதல் நேரத்திலும் போட்டியின் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படுவதில் சிக்கல் இருந்தால் ஷூட்-அவுட் முறைப்படி வெற்றியாளார் தேர்வு செய்யப்படுவார். ஷூட்-அவுட் முறையில் யார் வெற்றியாளர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றால், லீக் போட்டி முடிவில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியாளார் தேர்வு செய்யப்படுவார். 
நாளை நடக்கும் இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவும் அணிகள் நாளை மறுநாள் நடக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டியில் மோதும். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget