மேலும் அறிய

பக்தர்களே! சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி சாமி கும்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?

சிவாலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் சண்டிகேஸ்வரர் முன்பு கைதட்டி வணங்கக்கூடாது என நம்பிக்கை நிலவுகிறது. ஏன் என்பதை கீழே விரிவாக காணலாம்.

சிவாலயங்களில் சிவபெருமானுக்கு எதிரே எவ்வாறு நந்தி இருப்பாரோ, அதேபோல சிவாலயங்களில் கண்டிப்பாக சண்டிகேஸ்வரர் இருப்பார். சிவனை வணங்கி விட்டு நாம் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரர் கண்டிப்பாக இருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இதை காண முடியும்.

சண்டிகேஸ்வரைர வணங்கும்போது பலரும் கை தட்டி வணங்குவார்கள். மேலும், சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது என்றும் கூறுவார்கள். உண்மையில் இது தவறாகும். சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி சத்தம் எழுப்பக்கூடாது.

சண்டிகேஸ்வரர் என்பவர் தீவிர சிவ பக்தர் ஆவார். சிவபெருமானுக்கு செய்யப்படும் அனைத்து நேவேத்தியங்களும், மாலைகளும் சண்டிகேஸ்வருக்கு சேரும் என சிவபெருமானே அருள் வழங்கியதாக புராணங்கள் கூறுகிறது. மேலும், அவரின் சிவ பக்தியை மெச்சியே சிவ பெருமான் சிவசொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை சிவபெருமானே வழங்கினார். அவரே சண்டிகேஸ்வரர் ஆவார்.

சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவபெருமானை நினைத்து தவம் புரிபவர். சிவ சிந்தைனயிலே இருப்பவரான சண்டிகேஸ்வரர் முன்பு கைதட்டி அவரது தியானத்தை கலைப்பத பாவம் என்றும் ஐதீகம் கூறுகிறது. பிறகு ஏன் அவர் முன்பு கை தட்டப்படுகிறது என்று கேட்கிறீர்களா?

சிவனின் சொத்துகளை நிர்வகிக்கும் சண்டிகேஸ்வரர் முன்பு நின்று நாம் வணங்கி இரு கைகளையும் துடைத்து, கோயிலில் இருந்து சிவ சொத்துக்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று கூறும் விதமாக அவர் முன்பு நின்று கைகளை துடைத்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். இதை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு கைகளை தட்டிச் செல்கின்றனர்.

யார் இந்த சண்டிகேஸ்வரர்?

சோழ நாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற கோயில் உள்ளது. அந்த கிராமத்தில் எச்சதத்தன் – பவித்திரை என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு விசாரசருமன் என்ற மகன் இருந்தார். விசாரசருமன் பசுக்கள் மேய்த்து வந்தார். அவர் பசுக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவர் மேய்த்து வந்த பசுக்களும் அவர் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்தது.

விசாரசருமன் தீவிர சிவபக்தன் ஆவார்.  அவர் அங்கு மணலில் சிவபெருமானின் வடிவத்தை வடித்து, சிவபெருமானை நினைத்து தியானம் செய்வார். அவர் உருவாக்கிய சிவலிங்கத்தின் மீது பசுமாடுகள் பால்களை தானாகவே சுரந்து அபிஷேகம் செய்து வந்தன. பின்னர், வீடு திரும்பிய பின்னர் தங்கள் வீடுகளிலும் பசுக்கள் பால் கறந்து வந்தன.

இந்த விஷயத்தை அறிந்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசாரசருமன் தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால், அடுத்த நாள் தனது மகன் என்ன செய்கிறான் என்பதை காண எச்சதத்தன் சென்றார். அப்போது, வழக்கம்போல மணலில் சிவலிங்கத்தை வடித்து விசாரசருமன் சிவனை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, பசுக்களும் வழக்கம்போல தங்கள் பாலால் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய தொடங்கினர்.

இதைத் தொலைவில் இருந்து கண்ட எச்சதத்தன் கோபத்தில், விசாரசருமன் உருவாக்கிய மணல் லிங்கத்தை காலால் எட்டி உதைத்து உடைத்தார். தியானம் கலைந்து சிவலிங்கம் உடைந்து இருந்ததை கண்டு கோபம் அடைந் விசாரசருமன், அங்கே இருந்த குச்சி ஒன்றை தனது தந்தை மீது வீசினார். அந்த குச்சி கோடாரியா மாறி, எச்சதத்தன் காலை காயப்படுத்தியது.

அப்போது, விசாரசருமன் முன்பு தோன்றிய சிவபெருமானும் – பார்வதி தேவியும், எச்சதத்தின் காலில் இருந்த காயத்தை குணப்படுத்தினர். விசாரசருமனின் சிவ பக்தியை கண்டு, சிவ சொத்துகளை நிர்வாகம் செய்யும் பதவியான சண்டிகேச பதவியை வழங்கினார். அன்று முதல் விசாரசருமன் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், இவ்வாறு புராணம் சொல்கிறது. 63 நாயன்மார்களில் சண்டிகேஸ்வரரும் ஒரு நாயன்மாராக உள்ளார்.

இவ்வாறு சிவ சிந்தனையில் தியானத்தில் அவர் இருப்பதால்தான், அவர் முன்பு கை தட்டக்கூடாது என்றும் புராணங்களில் கூறப்படுகிறது, நம்பப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget