மேலும் அறிய

Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?

நாளை அதிகாலை 5 மணி அளவில் ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்த வள்ளி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்.
 
ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் ( vaikunda perumal temple )
 
புண்ணிய நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்வதும், ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் வைகுந்த வள்ளி சமேத வைகுந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மார்கழி மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் பரமபத வாசல் திறக்கப்பட்டு கோவில் கோபுரத்தின் மேல் தளத்தில் உள்ள அரங்கநாதன் பெருமாளை தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம்.

Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?
 
அதன்படி மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி வைகுந்த பெருமாள் திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைகுந்த பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.மேலும் இதனைத் தொடர்ந்து வைகுந்த பெருமாள் கருட சேவை உற்சவம் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது.

Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?

வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி தெரியுமா?

Vaikunta Ekadasi 2023 in Tamil: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு வாய்ந்தது ஆகும். அதில், மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மார்கழி மாதம் கருதப்படுகிறது. மார்கழி மாதம் வந்தாலே வைணவத் தளங்கள் களைகட்டி காணப்படும்.

வைகுண்ட ஏகாதசி 
இந்த மார்கழி மாதத்தில் வரும் நாட்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று கண்விழித்து கோயிலில் சாமி தரிசனம் செய்தால் ஏராளமான நன்மைகளும், புண்ணியமும் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். அந்த வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது தெரியுமா. இதில் விரிவாக காணலாம்.


Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?

விண்ணுலகத்தில் தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் ஒருவன் அச்சுறுத்தி வந்தான். இதனால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அவனது சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.  தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு முரனிடம் போரிட்டார்.

பிறந்தது எப்படி?


முரனிடம் போரிட்டு அந்த போரில் மகாவிஷ்ணு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு பிறகு மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணுவிடம் தோல்வியை தழுவிய முரன் மகாவிஷ்ணுவை நோக்கி வாளுடன் பாய்ந்து வந்தான். அப்போது, மகாவிஷ்ணு தன் உடலில் இருந்து மாபெரும் சக்தி ஒன்றை பெண்ணாக வெளிப்படுத்தினார். அந்த பெண் முரனுடன் போரிட்டார். அந்த பெண் முரனை வென்றார்.


அந்த அசுரனை வீழ்த்தி தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். முரனை வீழ்த்திய அந்த நாள் ஏகாதசி என்றும், அந்த நாளில் பெருமாளை வணங்குபவர்களுக்கு வைகுண்ட பதவி வழங்கப்படும் என்றும் பெருமாள் வரம் அளித்தார். இந்த நாளே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்கள் வைகுண்ட ஏகாதசி உருவானதாக கூறுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget