மேலும் அறிய

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா பத்தாம் திருவிழாவான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மாசித்திருவிழா ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார். மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி அளித்தார்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகரை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

இதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளினார். காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். 9ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மாசி திருவிழாவின் பத்தாம் நாளான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானை, காலை 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் வீற்றிருந்த தேர் புறப்பட்டு ரதவீதி சுற்றிவந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை சரியாக 7.20 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து தேர் ரதவீதி சுற்றி வந்து வந்து சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகள் பவனி வந்து மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராஜகுருவாக அருள்பாலிக்கும் குரு பகவான்: திட்டை கோயிலில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
ராஜகுருவாக அருள்பாலிக்கும் குரு பகவான்: திட்டை கோயிலில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
ஜூன் 2-ல் மகா சிவஜோதி ஐக்கிய காட்சி! ஆச்சாள்புரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..
ஜூன் 2-ல் மகா சிவஜோதி ஐக்கிய காட்சி! ஆச்சாள்புரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..
தேவர்களை காத்த தெய்வம்... பக்தர்களை காக்கும் ஆலங்குடி குருபகவான்!
தேவர்களை காத்த தெய்வம்... பக்தர்களை காக்கும் ஆலங்குடி குருபகவான்!
வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகனுக்குச் சிறப்பு பூஜை – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!
வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகனுக்குச் சிறப்பு பூஜை – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Embed widget