மேலும் அறிய

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா பத்தாம் திருவிழாவான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மாசித்திருவிழா ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார். மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி அளித்தார்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகரை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

இதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளினார். காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். 9ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மாசி திருவிழாவின் பத்தாம் நாளான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானை, காலை 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் வீற்றிருந்த தேர் புறப்பட்டு ரதவீதி சுற்றிவந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை சரியாக 7.20 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து தேர் ரதவீதி சுற்றி வந்து வந்து சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகள் பவனி வந்து மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.


திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் -  பயத்தில் பயணிகள்
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் - பயத்தில் பயணிகள்
Israel Iran: ”போட்டு தள்ளிடனும்” ட்ரம்ப் மிரட்டல்; டிவி நிலையத்தில் அட்டாக், இஸ்ரேலை அடிப்பது உறுதி - ஈரான் அதிரடி
Israel Iran: ”போட்டு தள்ளிடனும்” ட்ரம்ப் மிரட்டல்; டிவி நிலையத்தில் அட்டாக், இஸ்ரேலை அடிப்பது உறுதி - ஈரான் அதிரடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் -  பயத்தில் பயணிகள்
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் - பயத்தில் பயணிகள்
Israel Iran: ”போட்டு தள்ளிடனும்” ட்ரம்ப் மிரட்டல்; டிவி நிலையத்தில் அட்டாக், இஸ்ரேலை அடிப்பது உறுதி - ஈரான் அதிரடி
Israel Iran: ”போட்டு தள்ளிடனும்” ட்ரம்ப் மிரட்டல்; டிவி நிலையத்தில் அட்டாக், இஸ்ரேலை அடிப்பது உறுதி - ஈரான் அதிரடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
Hybrid SUV: சரிபட்டு வராது, கடைய விரிச்சிட வேண்டியதுதா.. 6 ஹைப்ரிட் எஸ்யுவிக்கள், அதுவும் இந்த பிராண்டிலா?
Hybrid SUV: சரிபட்டு வராது, கடைய விரிச்சிட வேண்டியதுதா.. 6 ஹைப்ரிட் எஸ்யுவிக்கள், அதுவும் இந்த பிராண்டிலா?
ஓம் நமச்சிவாய! திருவண்ணாமலை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் இத்தனையா? பக்தர்களே படிங்க
ஓம் நமச்சிவாய! திருவண்ணாமலை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் இத்தனையா? பக்தர்களே படிங்க
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
திமுக அமைச்சர் மூர்த்தி தொகுதியை குறிவைக்க பிளான்..  அதிமுக மாவட்ட செயலாளர் சொல்வது என்ன?
திமுக அமைச்சர் மூர்த்தி தொகுதியை குறிவைக்க பிளான்.. அதிமுக மாவட்ட செயலாளர் சொல்வது என்ன?
Embed widget