மேலும் அறிய

Thiruthani Murugan Temple: மயில், வேல் இல்லாத அறுபடை கோயில்... திருத்தணி முருகர் கோயில் சிறப்பம்சம் தெரியுமா ?

Thiruthani Murugan Temple: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகரின் ஐந்தாம் படைவீடு பற்றி தெரிந்து கொள்வோம்.  

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள, அருள்மிகு சுப்பிரமணிய சுவமி திருக்கோயில் முருகரின் ஐந்தாம் படை வீடாக திகழ்ந்து வருகிறது .

திருத்தணி முருகர் கோயில்

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.‌ அறுபடை கோயில்களில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிக முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்கி வருகிறது. தேவர்களை அச்சுறுத்தி வந்த, சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளி மற்றும் தெய்வயானியுடன் சாந்த சொற்பமாக காட்சியளிக்கும் கோயிலாக இக்கோயில் உள்ளது. 

முருகன் சினம் தணிந்து காட்சியளித்ததால், திருதணிகைமலை என அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பெயர் மருவி தற்பொழுது திருத்தணியாக, அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் முருகருக்கு வேல் இருக்காது. சாந்த ரூபாய் காட்சியளிப்பதால் முருகர் வேல் இல்லாமல் காட்சி தருவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலின் தலை விருச்சகமாக மகுடமரம் திகழ்ந்து வருகிறது. 


கடைசியாக காட்சியளிக்கும் விநாயகர் 


அனைத்து கோயில்களிலும் விநாயகர் சிலை என்பது முதலில் இருக்கும். விநாயகரை வழிபட்ட பிறகு, மூலவரை வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் திருத்தணி கோயிலில் மட்டும், விநாயகர் கடைசியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  ‘ஆபத்சகாய விநாயகர் ' இங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

தல வரலாறு கூறுவது என்ன ?


முன்பொரு காலத்தில் திருத்தணி மலைப்பகுதியில் வேடர்களின் தலைவனாக நம்பிராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். நம்பிராஜன் காட்டுப்பகுதிக்கு சென்ற பொழுது, வள்ளி கொடியில் பெண் குழந்தை கிடைத்துள்ளது. இக்குழந்தையை கடவுள் கொடுத்த வரமாக கருதி நம்பிராஜன், வள்ளி என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தார். வள்ளிக்கு திருமணம் வயது எட்டியுடன், வள்ளியை ஆட்கொள்ள முருகன் முடிவு செய்தார். 


இதனை அடுத்து முதியவர் வேடத்தில் வந்து பள்ளியிடம் திருவிளையாடலை தொடங்கினார். முருகருக்கு உதவியாக தனது அண்ணன், விநாயகர் யானை உருவம் எடுத்து, காட்டுப்பகுதியில் வள்ளி துரத்தி சென்றார்.‌ அப்பொழுது அங்கிருந்த முதியவரை பயத்தில் வள்ளி தழுவ, முருகன் தனது உண்மையான உருவத்தை வள்ளிக்கு வெளிப்படுத்தினார். அப்பொழுது வள்ளியும் முருகன் மீது காதல் வயப்பட , இருவருக்கும் தேவர்கள் ஆசியுடன் திருமணம் நடந்தேறியது.


மயில் இல்லை...

வருடத்தில் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிக்கட்டுகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு. இந்திரன் திருமண பரிசாக தனது வெள்ளை நிற யானையை முருகன் மற்றும் வள்ளி தேவனுக்கு அளித்ததாக புராணம் கூறுகின்றன. எனவே இந்த கோயிலில் மயிலுக்கு பதிலாக யானை வாசலில் காட்சியளிக்கிறது. முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட கல்ஹார தீர்த்தம் மலையில் உள்ளது. திருத்தணிகை தளம் என்பதால், மூலவருக்கு கையில் வேல் இருக்காது. அலங்காரத்திற்காக மட்டுமே வேல் வைக்கப்படுகிறது .

போரால் ஏற்பட்ட நெஞ்சில் பள்ளம்..


திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, சினம் தணிந்து காட்சியளிக்கும் தலமாக திருத்தணி விளங்கி வருவதால் , போரில் அசுரனுடன் மோதியதால் முருகன் நெஞ்சில் ஏற்பட்ட பள்ளம் இப்பொழுதும் மூலவர் சிலையில் காணப்படுகிறது. அதேபோன்று திருத்தணி முருகர் கோயிலில், விஷ்ணு துர்க்கை சிலை காட்சியளிப்பதும் அரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.



தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget