மேலும் அறிய

Thiruppavai 7: மார்கழி 7வது நாள்...7வது பாடல்...வேணும் என்றே நீ எழாமல், தூங்குவது போல் நடிக்கிறாயோ..? தோழியை செல்லமாக கண்டிக்கும் ஆண்டாள்..

Thiruppavai 7: சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள், 7வது பாடல் மூலம் காலை பொழுது நிகழ்வை, தமிழ் வார்த்தைகளை கொண்டு அழகான காட்சியாக வடிவமைத்திருக்கிறார்.

மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்களை இலக்கியம் மிக, திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.

ஆறாவது பாடல் முதல் தோழிகளை எழுப்புவது போன்ற பாடல்களை இயற்றியுள்ள ஆண்டாள், 7வது பாடல் மூலம், தோழியின் வீட்டைச் சுற்றி நிகழும் நிகழ்வை சுட்டி காட்டி தோழியை எழுப்புகிறார்.

பாடல் விளக்கம்:

கீச்சு கீச்சு என்று பறவை எழுப்பும் சத்தம் கேட்கவில்லையா அறிவில்லாத பெண்ணை என உரிமையுடன் தோழியை கண்டித்து எழுப்புகிறாள்.

மேலும், உன் வீட்டில் உன் தாயார், தயிர் கடையும் சத்தமும், தயிர் கடையும் போது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்கள் சத்தமும் கேட்கவில்லையா…

இதன் மூலம், அக்காலத்து ஆயர் குலத்து பெண்கள், காலையில் செய்யக்கூடிய தொழிலை தெரிந்து கொள்ளலாம்.

கண்ணனை பெருமை குறித்து, இக்காலை வேலையில் பாடுவதற்கு நீ வரத்தான் வேண்டும். சரி, நீ இதையெல்லாம் கேட்டு, வேணும் என்றே நீ எழாமல் தூங்குவது போல் நடிக்கிறாயோ, பிரகாசமான முகத்தை உடையவளே, எல்லாரயும் காலையில் எழுப்பி கூப்பிட்டு செல்வதாக சொன்னாயே, சீக்கிரம் எழுந்து வா என எழுப்புகிறார்

இப்பாடலில், இயற்கையின் சத்தம்,தோழிகளுக்கிடையே நிகழும் உரையாடல், காலை பொழுதினிலே நிகழும் காட்சியை கண் முன்னே கொண்டு வந்து, பாடல் வழியாக அழகாக ஆண்டாள் காட்சிப்படுத்தியுள்ளார். 


Thiruppavai 7: மார்கழி 7வது நாள்...7வது பாடல்...வேணும் என்றே நீ எழாமல், தூங்குவது போல் நடிக்கிறாயோ..? தோழியை செல்லமாக கண்டிக்கும் ஆண்டாள்..

திருப்பாவை பாடல்- 7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய். 

ஆண்டாள்:

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.

தொடர்புடைய செய்தி:Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்..

தொடர்புடைய செய்தி: Margazhi 2022: மார்கழி முதல் நாள்.. முதல் பாடல்.. ஒரு கண்ணில் சூரியன், மறு கண்ணில் நிலவு... போற்றி பாடும் ஆண்டாள்...

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result District Wise: கோட்டை விட்ட கொங்கு; சீறிப் பாய்ந்த சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்! 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி?
TN 10th Result District Wise: கோட்டை விட்ட கொங்கு; சீறிப் பாய்ந்த சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்! 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி?
TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்
TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result District Wise: கோட்டை விட்ட கொங்கு; சீறிப் பாய்ந்த சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்! 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி?
TN 10th Result District Wise: கோட்டை விட்ட கொங்கு; சீறிப் பாய்ந்த சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்! 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி?
TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்
TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்
TN 10th Result Centums: அறிவியல் & சமூக அறிவியலில் ஃபயர் - தமிழ் எப்படி? 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 100க்கு 100 விவரம்
TN 10th Result Centums: அறிவியல் & சமூக அறிவியலில் ஃபயர் - தமிழ் எப்படி? 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 100க்கு 100 விவரம்
IND - AFG: இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது - தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு
IND - AFG: இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது - தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு
10th result link 2025: டென்ஷன் வேண்டாம் - 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - எளிதில் அறிவதற்கான வழிமுறைகள்
10th result link 2025: டென்ஷன் வேண்டாம் - 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - எளிதில் அறிவதற்கான வழிமுறைகள்
Ravi Mohan: ”உங்களுக்கு வேலை, பொழப்பே இல்லையா” ஆர்த்தி - ரவி மோகன் - கெனீஷா விவகாரம், அடங்காத நீதிபதிகள்
Ravi Mohan: ”உங்களுக்கு வேலை, பொழப்பே இல்லையா” ஆர்த்தி - ரவி மோகன் - கெனீஷா விவகாரம், அடங்காத நீதிபதிகள்
Embed widget