மேலும் அறிய

Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்..

Margali 2022: மழை எப்படி பொழிய வேண்டும் என்பதை நான்காவது பாசுரம் மூலம் கண்ணபிரானிடம் எடுத்துரைக்கிறார், சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள்.

கி.பி- 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் ஆண்டாள், அந்த காலத்திலே மழை எப்படி பொழிகிறது என்பதை அறிந்துள்ளார்.

அறிவியல் அறிந்த ஆண்டாள்:

மழை எப்படி பொழிகிறது, நீரானது சூரிய ஒளியால் உறிஞ்சப்பட்டு, மேகமாக மாறி, பின் மழையாக மீண்டும் நிலத்தை அடைகிறது.

ஆண்டாள், மழை பொழியும் நிகழ்வை, மழையை கண்ணனாக பாவித்து, கடலில் இருந்து நீர் எடுத்து வந்து நிலத்தில் மழையாக பொழிய வேண்டும் என கூறியுள்ளார். அப்பொழுதே, தமிழர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு, இது ஒரு சிறந்த சான்றாகும்.

கண்ணனே மழையாக:

மேலும், கண்ணனிடம் கேட்கிறாள், மழை வளத்தை நீ கொடுக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்றால், உன்னுடைய உருவத்தை போல் இருக்க வேண்டும் கேட்கிறார்.

அதாவது, உன்னுடைய கருமை நிறம் போல மேகங்களும், உன்னுடைய கையில் உள்ள சக்கர ஆயுதம் போல மின்னலுடனும், மற்றொரு கைகளில் உள்ள வலம்புரி சங்கு போல இடி ஓசையுடனும், வில்லிருந்து புறப்படும் அம்பு போல மழை பொழிய வேண்டும் என கண்ணனிடம் கேட்கிறார்.

எனவே, கண்ணனே மழையாக வருகிறார். அத்தகைய மழை நீரில் நீராடலாம் என பிற மகளிரை அழைக்க செல்கிறார்.


Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்...

இதிலிருந்து, தமிழை அழகாக உருவகப்படுத்தி பாடல் அமைக்கும் வல்லமை ஆண்டாளுக்கு இருப்பதை அறியலாம்.

மேலும், இப்பாடலில் இருந்து, அக்காலத்து மக்கள் அறிவியல் புலமையும், தமிழ் புலமையும் அறியலாம். மேலும், மழையை இறைவனாக கருதுவதன் மூலம், எந்த அளவு மழைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகான தமிழில் அணி நயத்துடன் எடுத்துரைத்துள்ளார்.

Also Read: Margazhi 2022: மார்கழி 2ம் நாள்..! 2வது பாடல்..! ”புற அழகை விட அக அழகே சிறந்தது” என கூறும் சூடி கொடுத்த சுடர்கொடி

திருப்பாவை 4வது பாடல்:

 ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி,

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.

Also Read: Thiruppavai: மார்கழி 3வது நாள்.. 3வது பாடல்... "பிறருக்காக தாழ்வது தாழ்வில்லை.. உயர்வே" என கற்றுத்தரும் ஆண்டாள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
BSNL IPL Special: BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, அவங்க கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, அவங்க கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
Embed widget