மேலும் அறிய

சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

பக்தர்கள் புஷ்பகாவடி, கரும்பு காவடி, மயிலிறகு காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன் படத்தை வைத்து ஊர்வலமாக வந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் திணறியது. 



சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயிலில் அதிகாலை 1:00 நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.  பகல் 10:30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

பகலில் உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வடக்குத் வீதியில் தைப்பூச மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்து. இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலை சேர்ந்தார்.


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

தைப்பூசத் திருவிழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரை குழுக்களாகவும் கார் வேன் பஸ்களிலும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பச்சை நிற  ஆடையணிந்து திருச்செந்தூரில் குவிந்தனர். இந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும் நாழிகிணற்றில் புனித நீராடினர். பின்னர் நீண்ட  வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தியும் காவடி எடுத்தும். நீண்ட வேல்களால் அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் திருச்செந்தூரில் மக்கள் வெள்ளத்தில் திணறியது. பாதயாத்திரை பக்தர்களுடன் வந்த வாகனங்கள் ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் மட்டும் கோயில் வளாகம் வரை இயக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் நகரின் வீதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தைப்பூசத் திருவிழா விற்கு வரலாறு காணாத வகையில் பக்தர்கள் திரண்டதால் நகரமே ஸ்தம்பித்து.


சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் வெள்ளத்தில் திணறிய திருச்செந்தூர்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பி எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget