![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தைப்பூச விழா..! பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கோலாகலம்..! கோயில்களில் கொண்டாட்டம்..!
பெருநகர் தைப்பூச பெருவிழா இரண்டாம் நாள் பகல் உற்சவம் - சந்திரசேகரர் புறப்பாடு
![தைப்பூச விழா..! பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கோலாகலம்..! கோயில்களில் கொண்டாட்டம்..! Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar kanchipuram thaipusam day 2 and day 3 celebration - TNN தைப்பூச விழா..! பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கோலாகலம்..! கோயில்களில் கொண்டாட்டம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/70eadeccdd3d867d0cca66eaa0e666591705581841811739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெகு விமர்சியாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை அடுத்து இன்று காலை நடைபெற்ற பகல் உற்சவத்தில், சந்திரசேகரர் புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருநகரில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தைப்பூசம் எப்போது?
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
![பெருநகர் தைப்பூச பெருவிழா இரண்டாம் நாள் பகல் உற்சவம் - சந்திரசேகரர் புறப்பாடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/30fab227bdca7cb5738608b0333044081705581614697739_original.jpg)
தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
களைகட்டும் முருகன் கோயில்கள்:
தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
பக்தர்கள் விரதம்:
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)